Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அநுபூதி
51 செய்யுட்கள்

Sri AruNagirinAthar's
Kandhar AnubUdhi
51 verses

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி  - 18  உதியா மரியா
 
Kandhar Anuboothi udhiyA mariyA with meanings by Thiru S. NatarajanThiru S Nadarajan    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை'
    திரு சு. நடராஜன் (சென்னை)

   Meanings in Tamil by
   'Thiruppugazh Adimai'
   Thiru S Nadarajan (Chennai)

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 18 ... உதியா, மரியா

(துதி மயமான அநுபூதி)

உதியா, மரியா, உணரா, மறவா,
விதி மால் அறியா விமலன் புதல்வா,
அதிகா, அநகா, அபயா, அமரா
பதி காவல, சூர பயங் கரனே.

......... பதவுரை .........

உதியா ... பிறப்பில்லாதவனும்,

மரியா ... இறப்பில்லாதவனும்,

உணரா ... நினைப்பில்லாதவனும்,

மறவா ... மறதி இல்லாதவனும்,

விதி மால் அறியா ... பிரம்மனும் திருமாலும் தேடி காண
முடியாதவனும்,

விமலன் ... மலம் இல்லாதவனுமாகிய சிவ பெருமானின்,

புதல்வா ... குமாரனே,

அதிகா ... எல்லாவற்றிற்கும் மேலானவனே,

அநகா ... பாப இல்லாதவனே,

அபயா ... பாபம் இல்லாதவனே,

அமராவதி காவலா ... தேவ லோக ரட்சகனே,

சூர பயங்கரனே ... ராட்சசர்களுக்கு பயங்கரமானவனே.

......... பொழிப்புரை .........

பிறப்பு இறப்பு இல்லாத, நினைப்பும் மறப்பும் இல்லாத, பிரமனும்
திருமாலும் தேடிக் காண முடியாத, இயற்கையாகவே மலங்களில்
நின்று நீங்கிய சிவபெருமானின் குமாரனே, ஒப்புயர்வற்ற மேன்மை,
ஏற்றம், பொலிவு இவைகளை உடையவனே, பாபமற்றவனே, எல்லா
உலகங்களும் சரண் அடையும்படியான மேன்மை உடையவனே,
தேவலோக ரட்சகனே, அசுரர்களுக்கு அச்சத்தை விளைவித்தவனே.

......... விளக்கவுரை .........

கந்தர் அநுபூதியில் துதியாக அமைந்த ஒரே பாட்டு. வறுமையின்
கொடுமையை வேதனையை அடுத்த பாட்டில் சொல்ல வந்தவர்,
ஒரு ஏழை, செல்வந்தர்களின் வாசலில் நின்று, 'பிரபுவே .. ' எனக்
கூவி அழைப்பது போல் முருகனை கூவி அழைக்கிறார்.

இந்த அநுபூதியில், ஐந்துமுகச் சிவனை ஐந்து வகையிலும்,
ஆறுமுகனை ஆறு விளிகளாலும் புகழ்வது அற்புதமாக உள்ளது.

   1. உதியா ...

ஒரு தாய் வயிற்றில் உதிக்காதவன் சிவன். பிறவா யாக்கைப்
பெரியோன் என சிலப்பதிகாரம் கூறும்.

   2. மரியா ...

பிறப்பு இல்லாததினால் அவருக்கு இறப்பும் இல்லை. எல்லாம்
முடிவில் தன்னிடம் அடங்கச் செய்பவன். தான் என்றும்
நிலைத்து நிற்பவன்.

   ... முடிவில் ஒன்றென்றிருப்பவனை

... திருப்புகழ் (பாடல் 1124) 'அகரமுத லென' (பொதுப்பாடல்கள்)

   3. உணரா மறவா ...

சகலம் கேவலம், நினைப்பு மறப்பு, பகல் இரவு, என குறிக்கப்படும்
நிலைக்கு அப்பாற்பட்டவன். நாம் எல்லாவற்றையும் நினைத்துக்
கொண்டு விழித்திருந்தாலும் ஒன்றையும் நினைக்காமல்
உறங்குகிறோம். நாம் இப்பிரபஞ்சக் கட்டுக்குள்தான் அடங்கி
இருக்கிறோம். இறைவன் இந்நிலைக்கு அப்பாற்பட்டவன்.

   4. விதிமால் அறியா ...

படைக்கும் அறிவாற்றலாலும் காக்கும் பொருளாற்றலாலும்
அடைபவர்களுக்கு பிரதிநிதியாக பிரமனும் திருமாலும்
இருக்கிறார்கள். இவர்களுக்குள் யார் பெரியவர் என்கிற முரண்பாடு
வந்தபோது இரண்டிற்கும் அப்பாற்பட்டது அருளாற்றல் என்பதை
சிவன் உணர்த்தினார்.

   5. விமலன் ...

இயல்பாகவே மலம் இல்லாதவன். அவன் மல ரஹிதன்.

பின் முருகன் பெருமை கூறப்படுகிறது. யாவற்கும் எவற்றிற்கும்
மேலானவன், எதனிடமும் பயமற்றவன், அதனால் அவன்
அடியார்களுக்கும் பயமில்லை. அனாத்ம விருத்திகளாகிய
சூரபத்மாதிகளை அழித்து ஆத்ம விருத்திகளாகிய தேவர்களை
தம் சொந்த ஸ்தானத்தில் 'ஆத்மானுபூதி' நிலையில் நிலைபெறச்
செய்தவன்.

அண்டர்பதி' (சிறுவை) திருப்புகழில் இதைக் குறிப்பிடுகிறார்.
(பாடல் 724).

......... குறிப்புக்கள் .........

சிவனுக்கு உள்ள அடை மொழிகள் முருகனுக்கும், முருகனின்
விளிகள் சிவனுக்கும் பொருந்துவதைக் கவனிக்கவும். 'சிவ குக'
அபேதம் பல திருப்புகழில் காணக்கிடக்கின்றன.

   .. திரிபுரம் எரி செய்த கோவே
   (பாடல் 470) 'அவகுண விரகனை' (சிதம்பரம்)

   சிவாயப் ...... பெருமாள்காண்
   (பாடல் 515) 'பரமகுரு நாத' (சிதம்பரம்)

... எனப் பாடுவார்.

முருக பரத்துவத்தைக் கூறும் அருணகிரிநாதர், சிருஷ்டி, திதி,
லய தலைவர்களாகிய மும்மூர்த்திகளுக்கும் மேலான நான்காவது
இறை பொருள் முருகனே என்று சுப்ரமண்ய பரத்துவத்தை,

   படைத்து காத்து அழிக்கும் திரிமூர்த்திகள் தம்பிரானே

... எனப் புகழுவார். பாடல் 259 'கனைத்து அதிர்க்கும்' (திருத்தணிகை).
go to top
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.657  pg 4.658 
 WIKI_urai Song number: 18 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
0.10mb
 to download 
Malai Mandir Ishwinderjit Singh
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங்

'MalaiMandir' Thiru Ishwinderjit Singh
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
0.29mb
 to download 
Chennai Revathy Sankaran
சென்னை ரேவதி சங்கரன்

Revathy Sankaran (Chennai)
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
0.50mb
 to download 
திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam
 51 செய்யுட்கள்  51 செய்யுட்கள் (ஒலிவடிவத்துடன்) 
52-101 செய்யுட்கள்  52-101 செய்யுட்கள் (ஒலிவடிவத்துடன்) 
 பொருள் - பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா)  SS
 51 verses - English Transliteration   51 verses (with audio)
 52-101 verses - English Transliteration   52-101 verses (with audio)
 Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia)  SS
 அகரவரிசைப் பட்டியலுக்கு   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 For Alphabetical List   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar Anuboothi - Verse 18 udhiyA mariyA

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]