Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அநுபூதி
51 செய்யுட்கள்

Sri AruNagirinAthar's
Kandhar AnubUdhi
51 verses

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி  - 32  கலையே பதறி
 
Kandhar Anuboothi kalaiyE padhaRik with meanings by Thiru S. NatarajanThiru S Nadarajan    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை'
    திரு சு. நடராஜன் (சென்னை)

   Meanings in Tamil by
   'Thiruppugazh Adimai'
   Thiru S Nadarajan (Chennai)

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 32 ... கலையே பதறி

(கலை ஞானம் வேண்டாம்)

கலையே பதறிக், கதறித் தலையூடு
அலையே படுமாறு, அதுவாய் விடவோ?
கொலையே புரி வேடர் குலப் பிடிதோய்
மலையே, மலை கூறிடு வாகையனே.

......... பதவுரை .........

கொலையே புரி ... கொலை செய்வதையேதான் தொழிலாகக் கொண்ட,

வேடர் குல பிடி தொய் ... வேடர் குலத்தில் வளர்ந்த வள்ளிப்
பிராட்டியாரை தழுவி மகிழ்கின்றவனே,

மலையே ... மலை போன்றவனே,

மலை கூறு இடு வாகையனே ... கிரவுஞ்ச மலையை இரு கூறிட்டு
வெற்றி வாகை கொண்டவனே,

தலை ஊடு அலையே படும் ஆறு ... முதன்மையான
சமயவாதிகளோடு வாதம் செய்து பிணக்குதல் செய்து,

கலையே பதறி கதறி ... சாஸ்த்ர நூல்களை மனக் கலக்கத்துடன்
சத்தம் போட்டு பேசி,

அதுவாய் போய்விடவோ ... அப்படிப்பட்ட வாத பிரதிவாத
மாயையிலே நான் மூழ்கிவிடுவேனோ? (மூழ்க்விடக்கூடாது).

......... பொழிப்புரை .........

கொலை செய்யும் தொழிலையே தமது குல ஒழுக்கமாகக்கொண்ட வேடர்
குலத்தில் தோன்றிய பெண்யானை போன்ற வள்ளி பிராட்டியைத்
தழுவுகின்ற மலை போன்ற தோள்களை உடையவனே. கிரவுஞ்ச
கிரியை இரு கூறு ஆக்கியவனே, சமய வாதிகளுடன் வாதிட்டு, பிணங்கி,
சாஸ்திரங்களை கலக்கத்துடன் கத்தி அடியேன் ஆகலாமோ?

......... விளக்கவுரை .........

   1. ஏட்டுப் படிப்பை விழுந்து விழுந்து கற்று வாத பிரதிவாதங்களில்
சதா ஈடுபட்டு அவதிபட்டு ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது
என்பதற்கு இணங்க நான் இருக்கலாமா?

   2. கலை மான் தனது கொம்புகளை காட்டுக் கொடிகளில் சிக்கவைத்து
அதிலிருந்து மீள முடியாமல் துடித்து கதறி வேதனைப்பட்டு,
கடைசியில் வேடனிடம் அகப்பட்டு மரணத்தை சந்திப்பதுபோல
நானும் இன்னல்களில் சிக்கி மரணத்தைத் தழுவலாமா?

   3. நுண் கலைகளான சங்கீதம், நடனம், ஓவியம் போன்றவைகளைக்
ஆவலுடன் மிகவும் பரபரப்பாக கற்று, நானும் மண்டை கர்வம்
அடைந்து அகம்பாவத்துடன் வாழலாமா?

   4. நிவர்த்தி கலை, விசிஷ்டாக் கலை, வித்யாக் கலை, சாந்தி கலை
என்பன போன்றவைகளை கற்று வீண் விதண்டா வாதங்களில் தர்க்கம்
செய்து, மண்டை குழம்பிப் போய், வாய் வேதாந்தம் பேசும் போலிப்
பதராய் விடலாமா?

   5. இடகலை பின்கலை என்கிற சூட்சும நாடிகளில் குண்டலிணி
யோகம் பயிலும் ஆர்வத்துடன் முயன்று முரட்டு யோகத்தால் கபாலம்
பிளந்து அழியலாமா?

கலைகளை தந்திரக் கலை, மந்திரக் கலை, உபதேசக் கலை என
மூன்று வகையாகப் பிரிக்கலாம்:

   . தந்திரக் கலை என்பது இறைவானாலேயே அருளிச் செய்யப்பட்ட
ஆகமங்களைக் கொண்டது.

   . மந்திரக் கலை என்பதில் வழிபாட்டு தேவதையை கை முத்திரை
மூலமாக ஆவாகனம் செய்து, மூல மந்திரத்தை இடைவிடாமல் ஜெபிப்பது.

   . உபதேசக் கலை என்பதில் குரு முகமாய் உபதேசம் பெற்று, சமாதி
சட்கம் எனக் கூறப்படும் நெறி முறையில் வாழ்வது. அவை சமம், தமம்,
உபரதி, திதீட்சா, சமாதானம், சிரத்தை.

ஆனால் இவற்றுடன் நின்று அநுபூதி அடையாமல் காலத்தைப்
போக்குவதில் பயனில்லை.

வேடர் குலத்தை இங்கு கூறியதில் ஒரு உட் போருளும் உள்ளது.
முன் கூறப்பட்ட கலைகளை அநுசரித்தவர்களுக்குத்தான் அநுபூதி
கிட்டும் என்று பதறவும் கதறவும் வேண்டாம். ஆன்ம பரி பக்குவமே
முக்கியமான அம்சம். கொலை செய்வதையே தம் தொழிலாகக்கொண்ட
வேடர் குல வள்ளிக்கு அவளின் தீவிரமான ஆன்மீக பரிபக்குவத்தின்
காரணமாக முக்தி கிடைத்தது.

மற்றுமொரு உதாரணம் வேடன் கண்ணப்பன்.

முடிவாக தீவிர பக்தியே தேவை. கலைகளெல்லாம் அப்புறம்தான்.
வேற் குமரர்க்கு அன்பில்லாதவர் ஞானம் மிகவும் நன்றே என்பார்
அலங்காரத்தில் (66. நீர் குமிழிக்கு).
go to top
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.671  pg 4.672 
 WIKI_urai Song number: 32 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
0.10mb
 to download 
Malai Mandir Ishwinderjit Singh
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங்

'MalaiMandir' Thiru Ishwinderjit Singh
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
0.26mb
 to download 
Chennai Revathy Sankaran
சென்னை ரேவதி சங்கரன்

Revathy Sankaran (Chennai)
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
0.47mb
 to download 
 51 செய்யுட்கள்  51 செய்யுட்கள் (ஒலிவடிவத்துடன்) 
52-101 செய்யுட்கள்  52-101 செய்யுட்கள் (ஒலிவடிவத்துடன்) 
 பொருள் - பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா)  SS
 51 verses - English Transliteration   51 verses (with audio)
 52-101 verses - English Transliteration   52-101 verses (with audio)
 Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia)  SS
 அகரவரிசைப் பட்டியலுக்கு   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 For Alphabetical List   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar Anuboothi - Verse 32 kalaiyE padhaRik

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]