Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
திருவகுப்பு

Sri AruNagirinAthar's
Thiruvaguppu

Sri Kaumara Chellam
திரு அருணகிரிநாதர் அருளிய திருவகுப்பு
முன்னுரை
தமிழில் பொருள் எழுதியது
  'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன், சென்னை, தமிழ்நாடு  


Sri AruNagirinAthar's Thiruvaguppu
Preface
Meanings in Tamil by
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan, Chennai, Tamil Nadu

'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents numerical index complete song  PDF  search
previous page next page

ஒரே பொருளை பலவிதமாக வகுத்து தொகுத்து சொல்லும் நூல் வகைக்கு
வகுப்பு என்று பெயர். அருணகிரியார் இவ்வகையில் 25 வகுப்புகள் பாடி
அருளியுள்ளார். இவற்றுள் முதல் 18 தான் அருணகிரியாரின் வாக்கு
என்று ஆறுமுக நாவலர் போன்ற ஆன்றோர்களின் கருத்தாகும்.

   ஏழையின் இரட்டைவினை யாயதொரு டற்சிறையி
   ராமல்விடு வித்தருள்நி   யாயக் காரனும்


... என்று அருணகிரிப் பெருந்தகை திருவகுப்பில் கூறுவதினால் அவர்
மனித உடம்பை விட்டு கிளி ரூபம் பெற்ற பின் திருவகுப்புகளை பாடி
இருப்பார் எனத் தோன்றுகிறது. இக்கருத்திற்கு போதுமான
ஆதாரங்களும் உள்ளன. பெண்ணாசை பெரும் தீமை விளைவிக்கும்
என்பதை பல திருப்புகழில் அருணகிரியார் கூறி இருப்பதை பார்க்கிறோம்.
ஆனால் திருவகுப்புகளில் பெண்ணாசையைப் பற்றி எங்குமே
கூறப்படவில்லை. மேலும் எம பயத்தைப் பற்றி பல திருப்புகழ் பாக்களில்
சித்தரித்திருக்கிறார். முதல் 18 வகுப்புகளில் சேவகன் வகுப்பைத்தவிர
வேறு எந்த வகுப்பிலும் இது பற்றி கூறப்படவே இல்லை.

   உரைபெற வகுத்தருணை நகரின்ஒரு பத்தனிடும்
   ஒளிவளர் திருப்புகழ் மதாணிக்ரு பாகரனும்


... என்று வேடிச்சி காவலன் வகுப்பில் 'நான்' என்று சொல்லாமல் 'ஒரு
பத்தன்' (பக்தன்) படர்க்கையில் கூறி இருப்பது கவனிக்கப்பாலது. தான்
முன்பு மானிடப் பிறவியில் திருப்புகழை இயற்றினேன் என்கிற தொனி
இங்கு ஒலிக்கிறது.

மற்றுமொரு ருசிகரமான் செய்தி

திருப்புகழிலும் கந்தர் அந்தாதியிலும் புகலியின் வித்தகரான
ஞானசம்பந்தரை முருகப் பெருமானாகவே பாவித்து பாடியுள்ள
அருணகிரியார், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம், திருவகுப்பு ஆகிய
நூல்களில் இக்கோட்பாடு காணப்படவே இல்லை. இதே போல்
திருப்புகழில் பல இடங்களில் வரும் 'வயலூரா' எனும் சொல் ஏனைய
நூற்களில் காணப்படவில்லை.

   செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
      செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே


... என்று வரும்  பக்கரை விசித்ரமணி  எனத் தொடங்கும் விநாயகர்
திருப்புகழில், சொல்லி இருப்பது இறைவனின் கட்டளை என ஏற்று,
திருப்புகழில் மட்டும் செய்ப்பதியை கூறி ஏனைய நூற்களில் கூறாமல்
விட்டுவிட்டார் என எண்ணத் தோன்றுகிறது.

திரு அருணகிரிநாதரின் திருவகுப்பு முன்னுரை
Thiruvaguppu - Preface
 அட்டவணை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents numerical index complete song  PDF  search
previous page next page

Sri AruNagirinAthar's Thiruvaguppu - Preface

Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
Kaumaram.com uses dynamic fonts.
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com

 download Free Azhagi software and Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 

... www.kaumaram.com ...

The website for Lord Murugan and His Devotees

 ஆரம்பம்   அட்டவணை   மேலே   தேடல் 
 பார்வையாளர் கருத்துக்கள்   உங்கள் கருத்து   பார்வையாளர் பட்டியலில் சேர 
 home   contents   top   search   sign guestbook   view guestbook   join our mailing list 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0905.2023[css]