Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 75 - செய்தவத் தால
Kandhar andhAdhi - seidhavath thAla
Kandhar andhAdhi - seidhavath thAla    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.238  pg 4.239 
 WIKI_urai Song number: 75 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 75 ... செய்தவத் தால   (சம்பந்தர் தேவாரத்தின் பெருமை)

......... பாடல் .........

      செய்தவத் தாலஞ்சு சீரெழுத் தோதிலத் தீதலருஞ்
      செய்தவத் தாலஞ்சு கம்பெறச் சேயுரைக் கேற்றுருப்போய்ச்
      செய்தவத் தாலஞ்சு வைக்கனி யீன்றதென் னேம்வினையே
      செய்தவத் தாலஞ்சு கின்றன மும்மலச் செம்மல்கொண்டே ...... 75

......... சொற்பிரிவு .........

செய்தவத்தால் அஞ்சு சீரெழுத்து ஓதிலம். தீது அலரும்

செய் தவ தாலம் சுகம் பெற சேயுகரக்கு ஏற்று உருப்போய்

செய்த அத்தாலம் சுவைக்கனி ஈன்றது என்னம். வினையே

செய்து அவத்தால் அஞ்சுகின்றனம். மும்மலச் செம்மல் கொண்டே.

......... பதவுரை .........

செய் தவத்தால் ... முன்பிறவியில் செய்த தவத்தினால்,

அஞ்சு சீரெழுத்து ... சீரிய பஞ்சாட்சரத்தை (உபதேசம் பெற்று),

ஓதிலம் ... துதிக்கின்றோம் இல்லை,

தீது அலரும் ... தீமை விளையும்,

செய் ... நரக பூமி,

தவ ... அழிந்து போகவும்,

தாலம் ... பூவுலகம்,

சுகம் பெற ... நன்மை பெறவும்,

சேய்யுரைக்கு ... சம்பந்தராய் அவதரித்து அருளிச் செய்த தேவாரப்பாட்டினால்,

ஏற்று உருப்போய் ... ஆண் உருவம் நீங்கி,

செய்த ... சிவந்த,

அத்தாலம் ... அந்தப் பெண்ணுருவாகிய பனை,

சுவைக்கனி ... இனிய பழத்தை,

ஈன்றது எனஆனம் ... கொடுத்தது என்று சொல்லி துதிக்கவும் இல்லை (ஆதலால்),

வினையே செய்து ... தீமைகளை செய்துகொண்டு,

மும்மல ... மூன்று மலங்களாகிய,

செம்மல் கொண்டு ... போர்வையை தரித்துக்கோண்டு,

அவத்தால் ... ஏற்பட்ட துன்பத்தால்,

அஞ்சுகின்றனம் ... நடுக்கமுற்று பயந்து கொண்டிருக்கின்றோம்.

......... பொழிப்புரை .........

உலகோர் நரகம் எய்தாமல் இன்பத்தை அடைய, சம்பந்தர் அருளிச் செய்த தேவார நூல்களைப் படியாமலும், குமாரக் கடவுளை துதியாமலும், அவரது பஞ்சாட்சரத்தை ஜெபிக்காமலும், தவம் செய்யாமலும், தீவினையாலும் மலங்களினாலும் கட்டுண்டு வீணாக உழன்று திரிகின்றனர்.

......... குறிப்புக்கள் .........

1. இப்பாட்டு மூலம் பஞ்சாட்சரத்தை ஜெபிக்க இயலாதவர்கள் சம்பந்தரின் தேவாரத்தை ஓதினால் அதே பலன் கிடைக்கும் என்று தெரிகிறது.

2. மும்மலச் செம்மல் கொண்டே என்பதில் ஒரு நயம் வெளிப்படுகிறது. சாதாரணமாய் குளிரைப் போக்க போர்வையை தரிப்பார்கள். ஆனால் மும்மலப் போர்வையை தரித்தும், தீவினையாகிய நடுக்கத்தில் வருத்தமுற்றிருக்கிறோம்.

கந்தர் அந்தாதி - 75 - செய்தவத் தால
Kandhar andhAdhi - seidhavath thAla
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - seidhavath thAla

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]