பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/665

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 657 அரிய மறையால் - வேதங்களால் பெறுதற்கு அரிதான (அனிதய் வார்த்தையை) (அனிதய வார்த்தையை) இதயத்துக்கு எட்டாத - மனதுக்கு எட்டாத உபதேச மொழியைப் శ్లో - பெறுகின்ற பாக்கியம் எனக்குக் கிட்டுமா! அசுரர்களை (மூக்கறுத்து) அவமானம் செய்து, ஏழு, பெருமை கொண்ட நெடிய (திரை) கடல்களிலும் ஒலி உண்டாகச் சண்டை செய்தவனே! பொருள் - சிறப்பான பொருள், அடியால் - அடிதோறும் அமைய, அல்லது உண்மைப் பாருள்ை உனது திருவடித் துணையாற் பெறப் பாடல்களைப் பாடும், "புலவர்களுக்கு (உசாத் துணை) உற்ற துணைவனான (அல்லது புலவ்ர்க்ளின் ஆராய்ச்சிக்குத் துண்ை செய்யும்) (அனிதய வார்த்தையைப் பெறுவேனோ) f 1288. (தங்கள் எண்ணத்தை நிறைவேற்றச்) (சிறிய சினத்துச்) சிறிக் கோபித்தலால் (வசப்படுத்தும்) வழி (கான) ஏற்பட்டவுட்ன் - சிரித்தும், பேசியும், காமப் ப்ற்று உண்டாகும்படி - கனமாய் விளங்கிக் காமப்போர் செய்யும் கொங்கை தெரிய (ஆடையுள் பாதியே மறைய நின்று) (வந்தவனுடைய) மனதுக்கு ஒரு ஆறுதல் உண்டாக வேண்டி (அவன்) முலைந் மயங்கும்ப்டி (பேணியும்) அவனை உபசரித்து விரும்பியும் (மிகவாய) நிர்ம்பத் (தனத்தைப்) பொருளைக் கொள்ளையடிக்கின்ற மாதர்களின், (சதிக்கு வஞ்சனைச் சூழ்ச்சியில் (போம் வழி) அகப்படும் (வழி) தீய் ஒழுக்கத்தைத் (தவிர்வேனோ) விலக்கேனேர். நீக்கேனோ! தெனத்தத் தாதென என்னும் (பண்) பண்களைத் - திருத்தமான முறையில் - நன்றாக (அளி) வண்டுகள் இசை பாடுகின்ற, தினைப்புனத்தைக் காவல் கொண்டிருந்த குறமகள் வள்ளியை அணைவதற்கே ஒரு வழியைத் தேடி, அந்தக் குறக் கூட்டத்துக் காவலாளிகளுக்குத் தெரியாமல் * கவிஞர் உசாத்துணைப் பெருமாளே - என்றார் 1247-ஆம் பாடலில். t 1288 ஆம் பாடல் எட்டு எதுகையுடன் இரட்டைத் திருப்புகழ் ஒன்றாக அமைக்கப் பெற்றது. முதல் பாதி ஒரு பாடலாகும்; பின்பாதி பிறிதொரு பாடலாகும்.