பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 527 1218. இரு நோய் மலத்தை பிறப்பு . இறப்பு என்னும் பெரிய பவரோகத்தையும், ஆணவம், கன்மம், ΙΙΙ/ΤΕΤΠΙΙΙ எனப்படும், மும்மலங்களையும் சிவ தேஜஸ் கொண்டு (மிரட்டி வெருட்டி ஒட்டி, என்னை இனிமையாக அழ்ைத்து என்னுடைய சிரசின் மேலே - (உனது) இரண்டு திருவடிகளைச் சூட்டி, உன்னுடைய மயில் வாகனத்தின் மீது என்னையு ம் இருக்கச் செய்து, விளங்குகின்றதும் பொருந்தியதுமான வேலாயுதத்தை என் கையில்தந்து, நான் மகிழும்படியாக நாம் இருவோரும் ஒன்று படுவோமாக என்று - கயிலைமலைக்கடவுள் பெற்று அருளிய, விளங்கும் வேத (கற்பக விநாயக மூர்த்திக்கு நல்ல தம்பியே! அல்லது) - வேத கற்பக - வேதம் போற்றும் கற்பகம் அனைய வரதனே! என்றும் இளையோனே - விளங்கும் சிறந்த வேதப் பகுதிகளையும், தேவர்களும் பூலோகத்தவர்களும் போற்றி செய்ய (உபதேசிகப்பதமும்) உபதேச மொழிகளையும் (எனக்கு அருள்புரிவாயாக, (கரு நோய்) # சேரும் பிறவி நோயை ஒழித்து, என்னுட்ைய (மிடி) ### துள்ளாக்கி ஒழித்து விடும் ஆன்ையின் அழகிய முகத்தை உடைய கடவுள், அடியார்கள்.

  1. கற்பகம் - விநாயகருக்கு ஒரு சிறப்புப் பெயர். "தில்லைக் குடதிசைக் கோபுர வாயில் நிலவிய கற்பகக்

கன்று" சேக்கிழார் புராணம் "தில்லைவனக் கற்பகக் குஞ்சரம்" - சிதம்பர புராணம். 'பரங்கிரிவாழ் கற்பகத்தை" - பரங்கிரிப் புராணம் "ஆரூர் மாற்றுரைத்த கற்பகத்தை" - ஆரூர்ப் புராணம் "கற்பகம் எனவினை கடிதேகும்" - திருப்புகழ். கணபதி துதி. "மலைக்கொடி பயந்த கற்பகத்தை" - உத்தரகோச புராணம் மும்மதக் கற்பகத்தைக் கருத்து ளிருத்துவாம்' - சரபபுராணம் வேத கற்பகம் - வேதக செல்வ விநாயகனே" - அருணகிரிப் புராணம் X பதம் - எழுத்து, சொல், பொருள். Oகருநோய் அகற்றுதல் பிறப்பொழிக்கும் ஆனை திறை கொண்டவனைச் சிந்தை செய்வாம்" - அருணாசல புராணம்

  • மிடி தூள் படுத்திவிடு கடப்பமலர் அணிவோனே எனவும்

ðn L L GlyTLs).