பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524 முருகவேள் திருமுறை (7- திருமுறை 1217. கதிபெற தனதன தான தானன. தனதன தான தானன தனதன தான தானன தனதான இருகுஜழ மீது தாவடி யிடுவன வோதி நீழலி னிடமது லாவி மீள்வன நுதல்தாவி, இழிவன காம வேதமு மொழிவன தாரை வேலென எறிவன காள கூடமு மமுதாகக் கருகிய நீல லோசன அபிநய மாத ரார்தரு கலவியில் மூழ்கி வாடிய தமியேனுங். கதிபெற ஈட றாதன பதிபசு பாச மானவை கசடற வேறு வேறுசெய் தருள்வாயே ஒருபது பார மோலியு மிருபது வாகு மேருவு முததியில் வீழ வானர முடனேசென். *றொருகனை யேவு ராகவன் மருகவி பூதி பூஷணர் உணருப தேச t தேசிக வரையேனற்: பரவிய காண வேடுவர் தருமபி ராம நாயகி பரிபுர பாத சேகர சுரராஜன். பதிகுடி யேற வேல்தொடு முருகம யூர வாகன பரவச ஞான யோகிகள் பெருமாளே(227)

  • ஒரு கணை ஏவினது பாடல் 452 பக்கம் 6 குறிப்பு #

f சிவனுக்கு உபதேசித்தது பாடல் 327-பக்கம் 314 குறிப்பு. f ஞான யோகிகள் பெருமாளே. : () ஞான தேசிக மூர்த்தி. துங்கபத்திரை நதிக்கு வடதிசைக் கண் உள்ள ஞானபுரத்திலே தவத்தால் உயர்ந்த கெளசிக முநிவர் தத்துவ ஞானம் கைகூட வேண்டிச் சடக்கர மந்திரத்தைத் தியானித்துக் குருமூர்த்தியாகிய குகப் பெருமானை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். கந்தக் கடவுள் ஞானாசாரிய மூர்த்தியாகத் தோன்றிச் சிவஞானம் எனப்படும் பதி ஞானமே தெளிவை உண்டாக்கும், பேரின்பத்தைக் கூட்டுவிக்கும் என்பதை விளக்கி உபதேசித்தார். இங்ங்ணம் கெளசிகர்க்கு ஞானத்தின் இயல்புகளைவிளக்கிக் காட்டின காரணத்தால் முருகவேள் ஞானதேசிக மூர்த்தி எனப் பெயர் பெற்றார். இந்தப் பதி ஞானம் தான் பரம ஞானம், சிவஞானம், குகளுானம், பரஞானம், தத்துவ ஞானம், திருவடி ஞானம், அருள் ஞானம், அத்துவித