பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 முருகவேள் திருமுறை 17- திருமுறை ஆண்டார்த லங்கள ளந்திட நீண்டார்மு குந்தர் த டந்தனில் ஆண்டாவி துஞ்சிய தென்றுமு தலைவாயுற். (459ஆம் பக்கத் தொடர்ச்சி) காயம் மூன்றையும் சமர்ப்பிக்கின்றேன். நீ அவைகளுக்குப் பதிலாக - முத்தி - என்கின்ற ஒன்றைத் தா - என்றபடி . (4) கவிராஜ பண்டாரத்தையா - என்னும் புலவர் . "அருவித் திரிகூடத்தையா உனை நான் மருவிப் பிரிந்திருக்க மாட்டேன் ஒரு விமலைக் காதியிலே பாதி தந்தாய் அத்தனை வேண்டா மெனக்குப், பாதியிலே பாதி தந்து பார்" என்கின்றார் . விமலைக்கு பார்வதிக்கு உன் உடலிற் பாதி பாகம் (அர்த்த் நாரீசுரராய்) தந்தாய் - எனக்குப் பாதி வேண்டாம்; பாதியிற் பாதி அதாவது "கால்" தந்தருள் என்றபடி - கால் - திருவடி - உன் திருவடியைத் தா என்றவாறு. இத்தகைய கருத்தினது . "அற்புதஞ் செறிந்த சித்திரம் நிறைந்த அருமை சேர் பாடல்கள் சொல்லும், நற்பதம் உனக்கிங் கில்லை போ என்று நாத நீ கூறுவையாகில், சொற்பதம் வேண்டாம் சொல்லறச் சும்மா சுக முற இருத்தி" யென்றேனும், அற்பனுக் கொருசொல் வழங்குதி கருணை அண்ணலே தணிகை நாயகனே" என்னும் பாடலும் (தணிகை நாயகன் மாலை 84) இனி இந்த 1187-ஆம் பாட்டின் முதல் இரண்டடியில் கேட்ட வரம் -சிவபிரானுக்கு உபதேசித்த ரகசியம் - அருணகிரியார்க்குக் கிடைத்தது என்பதற்கும் சான்று உளது: "நாதா குமரா நம என்றரனார் ஒதாய் என ஒதியது எப்பொருள் தான்" (கந்தர் ھےW.L36 اک), "எரித்த பெருமானும் "நிருப! குருபர! குமர" என்றென்று பத்திகொடு பரவ, அருளிய மவுன மந்த்ரந்தனை. விளங்கும் படிக்கு இனிது உணர்த்தி யருள்வாயே" என்று நயமாகக் கேட்டும் (திருப்புகழ் 1127), "சடை யாண்டார் இறைஞ்ச மொழிந்ததை அருளாயேல் ...வேண்டாமையை" யேனும் கொடு" என்று ஏமாற்றும் வகையிற் கேட்டும் (திருப்புகழ் 1187), கம்பர்க்கு உபதேசித்தைச் சிறியேனுக்கு உபதேசித்தால் உன்குருத்வம் குறையுமோ என்று துாஷித்துரைத்தும்