பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப் புகழ் உரை 391 (சிக்குப்பட்டு மாட்டிக்கொண்டு, (உட்கி) நாணமும் அச்சமும் அடைந்து (பல்கொடு) - பல கொடுமையான (எற்றிக் கைக்குத்து) அடிகளையும், கைக் குத்துகளையும் அடைந்து (அடி பட்டு, குத்துண்டு) இதழ் தித்திப்பில் வாயிதழ் ஊறலின் தித்திப்புக்கு (ஒத்து) மனமொப்பி - அதில் ஏற்படும் பித்து - மயக்கம் மிகக் கொண்ட கொடிய நாயனைய நான் - = (திக்குக் கெட்டு), திசை தடுமாறி - மயக்கம் பூண்டு ஒட்டுச் சிட்டென - கண்ணியில் - வலையிலே - அகப்பட்ட சிட்டுக் குருவி போல பட்ட அவத்தைப் பட்ட அந்த துற்புத்திக் கட்டு அற கெட்ட புத்திகளின் இணைப்பு (சம்பந்தம்) நீங்கச் (செப்பத்து நல்ல வழியில் (உன்) உன்னைப் (பற்றற்கு பற்றுவதற்கு (அற்புதம்) ஒரு அற்புத வரத்தை அருள் புரிவாயாக தக்குத்தக் குக்குக் குக்குட டுட்டெனத் (தக்கு) நிலை பெற்றுள்ள (திக்கு எட்டு) எட்டுத் திசைகளும் (பொட்டெழ) பொடிபட, (விருது ஒதை) வெற்றிச் சின்னங்களின் ஒசை தத் தித்தித் தித்தித் தித்தென (தெற்று) செறிவுற நிரம்ப துட்டக் கட்டர் துஷடர்களாய்க் கஷ்டப் பட்டவர்களின் (படை) சேனையைச் (சத்திக் கொற்றத்தில்) வேலாயுதத்தின் வெற்றி வீரத்தால் குத்திய முருகோனே! துக்கித்திட்ட அத்தித் துக்க - அகம் (துக்கித்திட்ட அகம் - (உலக மாயையால்) துக்கப்பட்ட நெஞ்சம், (அத்தி துக்க அகம்) கடல்போன்ற துன்ப வீடாகிய நெஞ்சம், (நெக்குப் பட்டு) நெகிழ்ந்து, (எக்கி) மேலான நிலையை எட்டித் (துட்டு அறு) துஷ்ட குணங்கள் (தீய குணங்கள்) நீங்கப் பெற்ற, பரிசுத்த நிலையரான, அழகிய, பக்தர்களுக்கு உபதேசப் பொருளை பாலிக்கும் வேலனே! (துற்ற) நெருங்கியுள்ள (பொன்) அழகிய, பச்சை நிறமுள்ளதும், (கண் கலபம்) பீலிக் கண்களை உடையதுமான தோகையை உடைய (சித்ரப் பகூதி) விசித்திரமான மயிற் பறவையை உடைய அரசே! சொக்கர்க்கு (மதுரைச் சொக்கருக்கு சிவபிரானுக்கு (அர்த்தத்தை) பிரணவப் பொருளைச் சுட்டிக் குறித்து அறிவித்த பெருமாளே! (பற்றற்கு அற்புதம் அருள்வாயே)