பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 முருகவேள் திருமுறை (7- திருமுறை முக்குண மதுகெட ‘நானா வெனவரு முத்திரை யழிதர ஆரா வமுதன் முத்தமிழ் தெரிகனி வாயா லருளுவ தொருநாளே. திட்டென எதிர்வரு t மாகா ளியினோடு க்கிட தரிகிட தீதோ மெனவொரு த த சித்திர வெகுவித வாதா டியபத Losu(ттептейт.

  • நானா எனவரு முத்திரை -"நான்" என்பது ஜீவபோதம் இது முனைந்து நிற்கும்போது சிவபோதம் மறையும். சிவபோதம் முனைந்து நிற்கையில் ஜீவபோதம் ஒழியும்.

1. "நானான தன்மை நழுவியே எவ்வுயிர்க்கும் தானான உண்மைதனைச் சாருநாள் எந்நாளோ" 2. நான் நான் இங்கெனு ம் அகத்தை எனக்கேன் வைத்தாய்' 3. "நான் நான் எனக் குளறும் நாட்டம்" சி. நான் தலை நாண என்னுள் தான் என்றொரு முதல் பூரணமாகத் தலைப்பட்டு, ஒப்பில் ஆனந்தம் தந்து, என் அறிவை எல்லாம் உண்டு, அவசம் நல்கி, மோனந் தனை விளைத்தால் இனியாது மொழிகுவதே" 5. நான் என்னும் ஓர் அகந்தை எவர்க்கும் வந்து நலிந்தவுடன் சகமாயை நானாவாகித் தான்வந்து தொடரு மித்தால் வளரும் துன்பச் சாகரத்தின் பெருமை எவர் சாற்ற வல்லார். .ே "நான்றானெனு மயக்கம்" - "நான் நான் எனக் குளறு படை புடை பெயர்த்திடவும்" - என்றெல்லாம் தாயுமானவர் "நான்" என்பதன் தன்மையை எடுத்து ஓதி உள்ளார். (எந்நாள் பொருள் 7: பன்மாலை 5: பராபரம் 256, பாயப்புலி 14 ஆகார 15, உடல்பொய் 81; மெளன. 5) "நான் எனும் மட ஆண்மை" என்றார் 930ஆம் திருப்புகழில் பக்கம் 708 கீழ்க்குறிப்பைப் பார்க்க 'ஒன்பதாமவை தீத்தொழி லின்னுரை ஒன்ப தொத்துநின் றென்னுள் ஒடுங்குமே. அப்பர். 5-89.9 "என் பேச்சுக்கள் முதலிய எல்லாம் எவ்வளவு விரிந்து சூழினும் முடிவில்" நான் என்ற அகங்கார நிலையினவாய் வந்து என்னையே சுற்றி என்னகத் தடங்கும்; அது ஒன்பது" என்னும் எண்ணினைப்போல, இஃதெவ்வாறெனின் ஒன்பதை எதனால் எத்தனை பெருக்கினும், பெருக்கி வந்த எண்ணில் உள்ள இலக்கங்களைக் கூட்டினால் ஒன்பதே வருவது போல, 9 x 2 =18=