பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 325 (கலகக்) கலகத்துக்கு இடம் தரும் (கலை நூல் பல கொண்டு) (சமய) கலை நூல்கள் பலவற்றைக் கற்று (தருக்கித்து), எதிர் பேசிக் கதறியும், பதறியும், (உரைவென்று உயர்) பேச்சில் வல்லவனாய் வென்று, மேம்பட்டு, (கயவர்க்கு உளனாய்) - கீழ் மக்களுக்கு உள்ள புத்தியைக் கொண்ட வனாய், வினை நெஞ்சொடு - தீவினைக்கு உரிய எண்ணத்துடனே, செருக்கு மிகும். (கவலைப் புலமோடு) சஞ்சலம் உறும் அறிவுடனே நான் இருக்க ( நீ) என்னுடைய துக்கத்தைக் (கழிவித்து) நீக்கி, உன்னுடைய திருவடியிணையை அன்புடன்நான் தியானித்துவணங்கும் (நல்) வாழ்வைத் தந்து உதவ நினைத்தருள வேண்டுகின்றேன். விளங்கும்படியாகப் பதினாலு உலகங்களிலும் உள்ள இருட்டினை (கடி) விலக்கி ஒழித்து, (வான் எழும் அம்புலி) ஆகாயத்தில் எழுகின்ற சந்திரன் (எழில் மிக்கிட) அழகு மிக்குப் பொலிய (வேணியில்) தனது சடா பாரத்தில் வந்து பொருந்த இடப வாகனத்தில் ஏறி - இரண்டு திருக்கரங்களிலும் மானும், மழுவும், விளங்கும்படி அணிந்துள்ள இறை - கடவுள், அப்பதியாகிய - அந்தத் தலைவராகியவர், இனிய சொற்களைக் கொண்டவர் - ஆகிய சிவபிரானுடைய (இசைய) மனத்துக்குப் பொருந்தும்படி, (பரிவோடு) அன்புடனே இன்பகரமாக (அன்று) முன்பு (அருள்) உபதேசப் பொருளை அருளிய இளையோனே! மலைபட்டு - கிரவுஞ்சம் பிளவுபட்டு இரண்டு பிளவு உண்டாக, வலிய கடல் நிலை குலைய, (அஞ்சகர் அபிதா என) r என) அடைக்கலம் என்று (அஞ்சகர்) அழகிய ஜகத்தோர்سیl؟L بھی۔) முறையிட தமது வலிமையை இழந்து அசுரத் தலைவர்கள் (மங்கிட) பொலிவு இழந்து நிலை குலையக் கூரிய வேலாயுதத்தால் - மலை - மலைந்த போர் செய்த (வித்தக) ஞானனே! (வானவர்) தேவர்களும், இந்திரர்களும், மலரைக் கைக் கொண்டு மகா தவசிகளும் (முநிவர்களும்) தொழுது நிற்க வடிவுற்ற ஒரு அழகு பொருந்திய ஒப்பற்ற மயில் மீது வந்தருளும் பெருமாளே! (தொழும் வாழ்வது தந்திட நினைவாயே)