பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 229 (அன்பர்) அன்பு நிறைந்த ெ - சிவபிரானுடைய, நெஞ்சம் இன்புற்றுக் குளிரும்படி ப்விய சொற்களைப் பேசுபவன் (அல்லது சிவபிரானது நெஞ்சம் இன்புறும்படி செவ்விய உபதேசச் சொல்ன்ல்ச் சொன்ன்வன்) கந்த் சுவாமி - என்று (போற்றி) அன்டரும் - தேவர்களும், அண்டமும் - உலகமும் (உயர்ந்த பெரியோரும்) தொழுகின்ற பெருமாளே! = (இங்கு உழல்வேனோ) 1105. (உம்பரார்) தேவர்கள் உண்ணும் அமுதம் போன்றதும், (தொண்டை) கொவ்வைப் பழம் ப்ோலச் சிவந்ததுமான (வாய் அமுதம்) வாயிதழ் ஊறலாம் அமுதத்தை (உண்டு உண்டு) மேலும் மேலும் பருகி (நிரம்ப உண்டு) அணிந்துள்ள மேகலை - யணி :D போப், அயலாக - வேறுபட்டு ஒதுங்க - பக்கத் விலகி ԱԲ -- == (உந்தி) கொப்பூழ் என்கின்ற (வாவியில்) - குளத்தில் விழுந்து (இன்பமாக் முழுகி) சுகமாக முழுகி, அன்பு என்பதே இல்லாத (பொது மகளிரோடு) துவண்டு கல்ந்து, துவட்சி - சோர்வு உற்றுப் படுக்கையின் மேலே - * செம்பொன்னாலாய குடம் போன்ற கொங்கை மீதுள்ள ஆபரணங்கள் சிந்த இடம் பெயர்ந்து விழ, வாள் போன்ற (அல்லது ஒளி நிறைந்த) கண்கள் செந்நிறம் கொண்டு (அமர் ஆட) பொலிதலைச் செய்ய- (அல்லது கலக்கமுற) (திங்கள்) சந்திரன் போன்ற முகம் வேர்வை கொள்ள, அணைந்து இன்பக் கடலிலே விழுந்து அமிழும் (சிந்தையேன்) எண்ணமுடைய நான், என்னவிதமாகக் கரையேறுவேன் (எப்படி நற்கதி பெறுவேன் - என்றபடி) தந்தங்கள் நான்கினைக்கொண்டதும், வெண்ணிறமுள்ளதும், கம்பம் - துரன் போன்றதும் (அல்லது அசைந்து கொண்டே இருப்பதும்) மால் கிரி - பெரியமலை போன்றதுமான (ஐராவதத்தின்) மீது வரும் (கொண்டல்) மேகவாகனன் (அல்லது ழக்குத்திசைப் பாலகன்), (புலோமசையள்) இந்திராணியுடைய சக்கரம் - போர்க்கெழுந்தது போன்றதும் கனத்த குடம் போன்றதுமான பெரிய மலைபோன்ற கொங்கையை அணையும் இந்திரப் பேர் அரசன் (தேவேந்திரன்) பெற்று வளர்த்த கொண்டல் ஆனையை - மேகத்தை வாகனமாகக் கொண்ட ஆனையை - தேவசேனையைத் திருமணஞ் செய்து கொண்ட வீரனே!