பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 223 மலர்கள் விரித்த (அமளி) படுக்கையின் மேலே அணைத்து, (அச் சமயத்து உண்டாகும் (அமுத ஆதரத்தை) அமுதன்ன அன்பை (அல்லது عن அதரத்தை அமுதம் போன்ற வாயிதழ் ஊறலை) மன மகிழ்ச் o யுடனே (அளித்து மறவாதே - மறவாதே அளித்து) மறவாமல் தந்து உடலும் உயிரும் ஒன்றுபட்ட தன்மைபோல ஒன்றுபட்டிருக்க - (உனது எனது எனா மறிக்கை) - உன்னுடையது என்னுடையது என்று பிரித்துப் பேசுதல் உனது எனது என்னும் வேற்றுமை (ஒரு பொழுது ஒணாது சற்றும்) ஒரு பொழுது - சற்றும் ஒணாது ஒரு பொழுதும் - கொஞ்சமேனும் - கூடாது - (எனவேதான்) என்று அழுத்தமாக (உரை செய்) பேசும் மாதர்கள் தரும் புணர்ச்சியால் வரும் (தே. ரிதகத்தை) வருத்தங்களை ஒழிக்கவல்ல ஒரு உபதேசமொழியை அருளுவாயாக விசாலமான மகுடங்களை முடிகளைக் கொண்ட நாகரத்னம் உள்ள (காளிங்கன் என்னும் பர்ம்பின்) படம் நெகிழ்வு உற நடனமாடின தாமரையன்ன (யுக சரணம்) இரண்டு திருவடிகளைக் ண்ட திரு .#. தரி | ரனே கேசனே சரவண மடுவ அவதரித்த கும ! முரு | சக்ரவாள கிரியை செயும்படிச் செலுத்தின் மயில் ఫ్గ வெற்றி பொருந்திய வேலாயுதத்தைத் திருக்கரத்தில் அழகு விளங்க வைத்திருக்கும் $2 பெருமானே! மெய்ஞ் ஞான உண்மை வழியிற் செல்பவர்களின் செல்வமே அல்லது தத்வ ஞான நெறி உண்மை ஞான வழியிற் காணக் கிடைக்கும் செல்வ்மே) அசுரர் குலத்தவர்களை வேருடன் வெட்டி அழித்து, அடைக்கலம் (நீயே) என்று (ஓலமிட்டுக் கூவி உன்னிடம் சர்ன் புகுந்த தேவர்களைச் சிறையினின்றும் மீள்வித்த பெருமாளே! (போதகத்தை அருள்வாயே) 1 103. (அங்கதன் வசை கூறுபவன் - வைதற்சொற்களைப் பேசுபவன், (கண்டகன்) கொடியோன்,( பங்கிலன்) ப்ாங்கில்லாதவன் - தகுதி - நற்பண்பு - இல்லாதவன் - (பொங்கு நெஞ்சு அன்பிலன் அன்பு பொங்கு நெஞ்சிலன் - அன்பு எழுகின்ற உள்ளம் இல்லாதவன், துன்பவன் - துன்பத்துக்கு ஈடானவன் - புகழைத் தராத "புலவோர்களைப் பழிக்கும். அங்கதர்க்கு எளியேனலேன்" சம்பந்தர் 3-39-10 0 பங்கிலன் = பாங்கில்லாதவன்.