பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 முருகவேள் திருமுறை 17- திருமுறை *ககனமழை யுகைகடவு குடலுமென முதியவிழி கதுவியெழில் பொதியமிசை படர்கோலக். t கலப்கக ம்யில்கடவு நிருதர்கஜ ரததுரக கடகமுட னமர்பொருத பெருமாளே. (101) 1096. அறிவுபெற தனணதன தனணதன தனணதன தனணதன தனணதன தனணதன தனதான

  1. குடருமல சலமுமிடை யிடைதடியு முடையளவு

கொழுவுமுதி ரமும்வெளிற எறுமாகக் கொளகொள்ென அளவில்புழு நெளுநெளென விளைகுருதி குமுகுமென இடைவழியில் வர நாறும்,

  • இந்திரன் ஆயிரம்கண் பெற்றது . கெளதம முநிவரின் மனைவி அகலிகையைக் கூட எண்ணின இந்திரன் - சாபம் பெற்ற வரலாற்றை பாடல் 379 - பக்கம் 458 - கீழ்க்குறிப்பிற் காண்க

"ஆயிர மாதர்க் குள்ள அறிகுறி உனக்குண் டாகென் றேயின னவை எலாம்வந் தியைந்தன. இமைப்பின் முன்னம் அந்த இந் திரனைக் கண்ட அமரர்கள் பிரமன் முன்னா வந்து கோதமனை வேண்ட மற்றவை தவிர்த்து மாறாச் சிந்தையின் முனிவு தீர்ந்து சிறந்த ஆயிரங்கண்ணாக்க". - கம்பராமா. அகலிகை .78, 81. "பாக சாதன நிற்கவையெலாம் கண்களாயிர மாகெனப் பகர்ந்தான்" - சுழியல் புரா - கெளதம - 7. " கரவுதிர் யோனிமுற்றும் கண்களாப் பொலியச் செய்தாம் ... ஆயிரங் கண்ணனானான் - நாகைப்புரா - காகதீர்த்தம் 56, சாபம் தீர்ந்து இந்திரன் ஆயிரங் கண்பெற்ற தலம்.திருக்கண்ணார் கோயில் இது வைத்திசுரன் கோயிலுக்குத் தென் கிழக்கு 1/2 மைல் தூரத்தில் உள்ளது. "முன்னொரு காலத் திந்திரன் உற்ற முனிசாபம் பின்னொரு நாளவ் விண்ணவ ரேத்தப் பெயர் வெய்தித் தன்னரு ளாற்கண் ணாயிரம் ஈந்தோன் சார்பென்பர் கன்னியர் நாளுந் துன்னமர் கண்ணார் கோயிலே". . சம்பந்தர் - 1-101-7.