பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 101 குற்றும் இலாத நீதி நெறியில் இபாருந்திய பக்தி சிறந்த பக்தர்கள் போற்ற் அவர்க்ளை வாழ்வித்த பெரும்ாளே! (தாள்பற்றி ஒதற்கு நீ-உணர்வாயே) 1037. (தோல் அத்தியால்) தோலாலும் எலும்பினாலும் (அப்பி. னால்) நீராலும், ஒப்பிலாத வகையில் அமைந்துள்ள (தோளு தோள், கை கால் இவை கூடிய (குடிலுடே) குடிசையாம் உடலிடத்தே தளர்ந்து போதலில்லா (வாழ்வுற்ற கால்) நான் வாழ்ந்திருக்கும் காலத்தில், பற்றி - என்னைப் பிடித்து (ஏகைக்கு) செல்வதற்கு (அல்லது நல் வர்ழ்வு தரும் உனது (கால்) திருவடியைப் பற்றி, ஏகைக்கு - நான் என் வாழ் நாளைச் செலுத்துதற்கு அல்லது வாழ்வு தரும்ப்டிய்ான (கால்) வழியை நான் பற்றி என் வாழ் நாளைச் செலுத்துத்ற்கு), (வேதித்த என் மேல் மாறு கொண்ட (பகைமை ೬ಧಿ (சூலத்தன்) ரி சூலத்தை ஏந்தின யமன் என்னிடம் நருங்கிவரும் முன்பாக (கோலத்தை) தன உருவைக் கடலிலே (மாமரமாய்ச்) சேர்ப்பித்த சூரன், (கொத்தோடே பட்டு) தன் குலத்தாருடன் (பட்டு) அழிந்து விழ்ச்செய்த கொலைத் தொழில் வல்ல வேலா யுதனே! குற்றமற்ற உனது திருவடியிலே புத்திமிக்க புத்தி மிகுதற்கு நீ வெற்றி தருவதாம் திருவருளை (எனக்குத்) தந்தருளுக (கடலில் எழுந்த) லகால விடத்தைப் யில் உள்ளோர் களும், பல திசைகளில் இருந்தவர்களும் வானில் இருந்தவர்களும் தத்தம் உயிர் மாண்டு இறந்து படாமல். (ஆலித்து) களித்து - நடித்து (மூலத்தொடே) அடியோடு ‘...; விஷத்தையும். (உட்கொள் ஆதிக்கும்) உட்கொண்ட (உண்ட) ஆ மூர்த்திக்கும் (ஆம் வித்தையாம் அத்தை) ஆகும் வித்தையாகின்ற அன்த் ஏற்றதான (வித்தை) உண்மை ஞான மாகிய அந்தப் பொருளை உபதேசித்தவனே! " உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்தாள்" - திருமுருகாற்றுப்படை - ஆதலின் வாழ்வுற்ற கால் என்றார்.

  1. ஆலம் உண்டது - பாடல் 509-பக்கம் 162 கீழ்க்குறிப்பு.

விஷம் முழுமையும் சுந்தரர் கொண்டுவந்து தர இறைவன் உண்டனர். யாண்டும் துன்றிய விடத்தைப் பற்றிச் சுந்தரன் கொடுவந் துய்ப்ப, ஒன்றொரு திவலையேபோல் ஒடுங்குற மலர்க்கை வாங்கி. மிடற்றில் எங்கோன் பொலன்மணி அணியதென்ன . நிறுவி' - கந்த புரா. 6-13-354. 359 x உபதேசித்தது - பாடல் 327 - பக்கம் 314 கீழ்க்குறிப்பு.