பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/975

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திருவாரூர். (ரெயில்வே ஸ்டேஷன். நாகப்பட்டினத்துக்கு மேற்கு 14 மைல். மூவர் தேவாரமும்பெற்றமுதுநகர். தன் மகன் ஏறிச்சென்ற தேரின் கீழ்ப்பட்டு மடிந்த கன்றின் தாயான பசுவின் துயரைச் சகியாது அம் மகன் பட்டுமடிய அவன் மீது தேர் ஊர்ந்து சென்ற மநுநீதி கண்ட சோழன்"அரசு புரிந்த திருப்பதி. இதனை யித்தலத்துக் குரியதிருப்புகழ் 6-ஆம் பாடலிற் காண்க: ஸ்தலபுராணம் உண்டு.) 820. வாழ்நாள் வீணாளாகாமல் தானா தானா தானா தானா தானா தானத் தனதான கூசா தேபா ரேசா தேமால் கூறா நூல்கற் றுளம்வேறு. கோடா தே'வேல் பாடா தேமால் கூர்சு தாளத் தொடைதோளில், வீசா தேபார் பேசா தேசீர் வேதா தீதக் கழல்மீதே, விழா தேபோய் நாயேன் வானாள் t வீணே போகத் தகுமோதான்; நேசா வானோ ரீசா வாமா நீபா காணப் புனமானை. நேர்வா யார்வாய் #சர்வாய் சார்வாய் நீள்கார் சூழ்கற் பகசாலத்;

  • வேலைப் பாடுங்கள் என்பது அருணகிரியார் அழுந்தச் சொல்லும் உபதேசங்களுள் ஒன்று.

"ஆடும்பரி வேல் அணிசேவலெனப் பாடும் பணியே பணியா அருள்வாய்" "வினையோட விடுங் கதிர்வேல் மறவேன்".கந்தரநுபூதி 1. 40, "காய்வேல் பாடேன்" - திருப்புகழ் 1062. 1 கூச்சமில்லாமலும், உலகினரின் ஏசுதல் இல்லாமலும், உள்ளம் கோணல் வழியிற் செல்லாமலும் நான் வேல் பாடவேண்டும். அத்தகைய நிலையில் இருந்து, நான் வேலைப் பாடாமலும், மாலையை (தொடர்ச்சி 417 ஆம் பக்கம்)