பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/856

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீகாழி திருப்புகழ் உரை 297 தெய்வயானைக்குத் தலைவனே! குறமான் (வள்ளி) மகிழ்கின்ற செய்யனே (செந்நிறம் உடையவனே) முத்தமிழுக்கு இருப்பிடமானவனே! புகழத்தக்க தெய்விகம் பொருந்திய பரம்பொருளே! குருவே! என்று வெற்றிச் சின்னங்கள் ஊதத் (திய்யார்) தியராம் (சமணர்கள்) கழுஏற, திருநீறு பரப்பியிட்ட திருக்கரத்தனே! அற்புதனே! பிரமாபுரம் என்னும் பெயர் பெற்றதும், (செப்) வயல்கள் சூழ்ந்ததுமான காழிப்பதியில் வாழ்கின்ற முருகா! தேவர் பெருமாளே! (ஒர் பொருள் அருள்வாயே) 772. கள்ளிலும், காமத்திலும், குரோதத்தே) கோபத்திலும் (கண் சீமிழ்த்தோர்கட்கு) கண் சிமிழ்த்தவர்கள்மீது - கண் கொட்டுபவர்கள் மீது - கடைக்கணிப்பவர்மீது - (கள், காமம், கோபம் இவைதமைத் தள்ளாது ஏற்றுக் கொள்ளுபவர்கள் மீது) இவைகளின் கட்டிற் பட்டவர்மீது - பாடல் பாடிக்.... (கச்சா பிச்சாக) தெளிவுமுறை யில்லாத வழியில் (தாவித்து ஆரத்தே) (பாடப்பட்டோன் பெருமையை) ஆரத்தே தாபித்து பாமாலையில் நிலைநாட்டி, அக் கொட்களை (அங்ங்னம் பாடினதால்) கொள்களை m கொண்ட பொருள்களை - நெடுக - நெடுநாளாக....... கொள்கால் - சேகரிக்கும்பொழுது - அப் பொருளை அக்கோலக் கோணத்தே - அந்த அழகிய திரிகோணம் போன்ற அல்குலுக்கே (இட்டு) கொடுத்து ஆசைப்பட்டிடவே வைத்து (இங்ங்னம்) -- கொள் தானத்துக்கு (ஏற்கும் தானத்துக்கு தானப் பொருளுக்காகவும், (இந்த) ஊனுக்கா - உடலுக்காகவும் (தேடி) (எய்த்தேன்) இளைத்தேன்; (இத் திதத்தை) இத் தீது அதை (எனக்குள்ள) இந்தத் தீய குணத்தை நீக்கி அருளுவாயாக.