பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/616

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவலங்காடு திருப்புகழ் உரை 57 (சூரன் செல்லும் இடமெல்லாம் உடன்) திரிந்து (உம்பர்) வின் அளாவி நீண்டிருந்த எழுகிரியைப் பிளந்து சூரருடைய போர் ஒடுங்கும்படி வேலாயுதத்தைச் செ லுத்தியவனே! (செயல்) ஒழுக்கம் அமைந்த ஒழுக்கத்துடன் ஒதப்பட்ட வேதத்தின் ஒலி முழங்கும் வீதியைக் கொண்ட திரிவிரிஞ்சையில் வீற்றிருக்கும் பெருமாளே! (உபயதுங்க பாதம் அருள்வாயே) திருவாலங்காடு 677. பெருத்த கொடிய (ஆலம்) விஷம் மிக்குள்ள கண்களைக் கொண்ட மாதர்கள், (மன - சாலம்) மனத்திலே (ஜாலம்) வஞ்சனை நடிப்பு வண்ணம் மிக்குள்ள பழிகாரிகள், (அல்லது மனசால் - அஞ்சால் மனதாலும் ஐம்பொறிகளாலும் == பழிகாரிகள் --- பழிப்புக்கிடமான செயல் செய்பவர்கள்), (கன போக - அம்போருகம்) மிகுந்த போக சுகத்தைத் தரக்கூடியதும், தாமரை மொட்டுக்கு ஒப்பானதுமான கொங்கையின் மீதே. (கசிவு ஆரும்) மன நெகிழ்வு - அன்பு மிகுதிக்கு அடையாளமாக அமைந்துள்ள (கிறு) கீறல்களாலும் (கிள்ளால்) கிள்ளின் குறிகளாலும் பழிப்புக்கு இடம் தரும் (காளிமiணிகள்) கறுப்பை களிம்பை அழுக்கைக் கொண்ட வீனர்கள் - (களி) களிப்பை - ஆவேசத்தைத் தரும் பேய் அமுது ஊண்) திய, வெறித்தன்மையைத் தரும் உணவை ஊணாகத் தருகின்ற அசுத்தர்கள். (மனவேலங் கில கலாவிகள்) மனம் ஏல் அம் கிலக. கலாவிகள் - மனத்தில் (ஏல்) - பொருந்திய (கிலக தந்திரம் வாய்ந்த (அம்) அழகிய (கலாவிகள்) தந்திரவாதிகள், மயமாயம் (மாயமயம்) மாயம் நிறைந்த வஞ்சனை பாசாங்கு நிறைந்த (கீத விநோதிகள்) - இசை ஞானத்தில் இன்பம் கொள்பவர்கள் (மருள் ஆரும்) காம மயக்கம் நிறைந்த காதலர்கள் (தம் மீது மோகம் கொண்டு வந்தவர்கள்) மேலே விழுகின்ற (பொது) மகளிர் - ஒளி பொருந்திய