பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 535 வைக்கப்படும் அழகியபுயங்கள் பச்சை (தட்டை மூங்கிலுக்கு ஒப்பிடப்படும்; தாமரையை நிகர்க்கும் கை அழகியநகங்களை வகையாகக் கொண்ட விரல் (விரல் நகத்துக்குக் கிளிகளின் (முகத்து) மூக்கு நகம் ஒப்பாகும்; இகலிய) ஒத்து நிற்கும் மலை இரண்டுபோல, வட்டமாய், வளித் தேமல் கொண்டு விளங்குவதாய், சக்கிரவாகப் புள் போன்றதாய், பொன் குடம் போன்று விளங்கும் கொங்கைகள் தம்மேல் உள்ள. மாலைகளாப் வரிசை வரிசையாக முத்துடனும் பவளத்துடனும் அசைய (பழுமர இலை ஆலிலை போன்ற வயிறு, வயிற்று உரோமம் (அல் பத்திக்கு இணை) இருளின் வரிசைக்கு ஒப்பு: அழகிய கொப்பூழ் (தொப்புள்) நீரில் உள்ள சுழி (மொக்குளுக்கு ஒப்பாகும்; அழகிய கொடி போன்றதும்; மன்மதனது உருவம் போலக் கண்ணுக்குப் புலப்படாத நுண்மை கொண்டதும், (துடி) உடுக்கை போன்றதுமான இடை மின்னலுக்கு ஒப்பாகவும் அருமை வாய்ந்த அல்குல் அமுதச் சுவை, கரும்பின் ரசம், தேன் கொண்ட (கூடு), அழகிய கமலம், (சக்கிரி) பாம்பின் பொறி கொண்ட படம் இவைகளுக்கு நிகராகும் பட்டாடை பூண்டுள்ள தொன்டைகள் இரண்டும் வாழைக்கு ஒப்பாம், பரடு கொண்ட கணைக்கால் முழவு வாத்தியம், ஒக்கும்; ஆமை எழுதி நிறைந்த வட்டவடிவுள்ள ஓலைப் புத்தகம் ப்ோன்று க்கும் புறங்கால். இத்தகைய இலக்கணங்கள் நிரம்பிய பொதுமகளிர் - கிளிகள் போலவும் மயில்போலவும் தெருவில் நின்று தங்கள் கொங்கைக்கு விலை பேசி அவரவர் காமமயக்கொடு அணையும்படி மயக்கும் தொழிலைச் செய்து, (தெட்டி) வஞ்சித்துப் பல பல விதமான சொக்கு மருந்துகளை உணவிலுாட்டி, பொருளைக் கவர்ந்து கட்டிலில் அணைதற்குச் சம்மதித்துப் புணர்ச்சிக்கு உட்பட நெற்றிப் பொட்டு அழிந்துபோக, கண்கள் சுழல, மலர்கள் பொருந்தியுள்ள கூந்தலும், இடையில் உள்ள புடைவையும் குலைந்து கலையத் (தித்தி) அனுபவித்து, (துப்பு) பவளம் போன்ற (இதழ்) வாயிதழ் (வைத்து) (ஊறலைத்) தந்து, கை கொண்டு அணைத்து, குத்துமுலைக்குள்) திரண்டுள்ள கொங்கைகளைக் கையிற் பற்றிக் கட்லினின்றும் அமுதம் கடைந்தெடுத்தது போலவும், கரும்பினின்றும் சாறு எடுப்பதுபோலவும். பலாப்பழத்தி னின்றும் சுளைகள் எடுப்பதுபோலவும், உருக மெத்த காமமயக்கில் அகப்பட்டு, அதனால் உடல் நலம் கெட்டு. உள்ளமும் நாணம் உற்று (வெட்கம் அடைந்து) துயரமும் நிரம்ப அடைந்து கொக்குப்போல (நரைமேவி) மயில் வெளுத்து. 4 தேன்கூ டரவ படம் செந்தாமரைப் பூ மதுக் குழாய்...அமுதம் சருக்கரைக் கூடு - கூடி X முரவு கணைக்காலுக் கிணங்கும் உவமை - கூடி Oபுறங்கால் ம் பொச் ե' - ծոֆ

  • தெட்டி - வஞ்சித்து தெட்டிப் பொருள் பறித்த பாவம் - பண விடு துாது 340. தெட்டிகள் - வஞ்சிப்பவர் - திருப்புகழ் 840.