பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை பத்த ருண்மை சொல்லு ளுற்ற செம்மல் 'வெள்ளி பத்தர் கன்னி புல்லு, மணிமார்பா. பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே. (28) 618. வினையற. தனதாத்த தய்ய தனதாத்த தய்ய தனதாத்த தய்ய தனதான t இருள்காட்டு செவ்வி ததிகாட்டி வில்லி னுதல்காட்டி வெல்லு மிருபான. இயல்காட்டு 4 கொல்கு வளைகாட்டி முல்லை நகைகாட்டு வல்லி யிடைமாதர் மருள்காட்டி நல்கு ரவுகாட்டு மில்ல இடுகாட்டி னெல்லை நடவாத வழிகாட்டி நல்ல றிவுகாட்டி மெல்ல Xவினை வாட்டி யல்லல் செயலாமோ. தெருள்காட்டு தொல்லை மறைகாட்டு மல்லல் மொழிகாட்டு தில்லை யிளையோனே. தினைகாட்டு கொல்லை வழிகாட்ட வல்ல குறவாட்டி புல்லு மணிமார்பா:

  • வெள் இபத்தர் - வெள்ளை யானையையுடைய தேவேந்திரன். f இருள் விரி குழலை - என்றார் பிறிதோர் இடத்து - பாடல் 53, பக்கம் - 136.
  1. முழுநீலம் கொல்லும் மதன் அம்பின் குணம் - பாடல் 19. பக்கம் 60 கிழ்க்குறிப்பைப் பார்க்க

Xவினை வாட்டி அல்லல் செயல் ஆமோ - வினையை வாட்டிய பின்னரும் அது துன்பஞ் செய்யலாகுமா?