பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 379 கழுத்தை நன்றாகக் கட்டியும், சிரித்தும், `ಿ ஆடையை (முந்தானையை) _ முன்றானையைப் டித்துக் கலைத்தும், நல்ல குணத்தைப் பித்து பிறக்கும்படிச் செய்கின்ற மாதர்களின்மீது (மனத்தைப்) பதித்து (அழுந்த வைக்கத்) தாம்பெற்ற (தனத்து ஒக்க) பொருளுக்குத் தக்க்படி வசப்படுத்தி நன்றாகக் கட்டியும், பசப்பியும் (இன்முகம் காட்டி ஏய்த்தும்), பொன் தரப்பெற்று அடைந்து, (வந்தவனுடைய) பொருள் வற்றிப்போம் அளவும். (அவனிடம்) பறித்துப் பின்னர் அவனை வெருட்டித் துரத்தும் சொற்களை உடைய வஞ்சகப் பெண்கள் மீது ஆசை உண்டாகிப் பின்னர் வருத்தத்தை அடைந்து நான் அலைச்சல் உறுவேனோ! விரைந்தெழுந்து எதிர்த்தும், பின்னர் கொதிப்புற்றுச் சங்காரம் செய்து பற்களைக் கடித்துக் (கோபித்துப்) போய், கலக்கித் துக்கப்படும் அசுரர்களை ஒழித்து முன்பு (அமர்க்கு) அமரர்களுக்குத் தேவர்களுக்குச் செவ்விய நிலையைத் தந்தருளி (பொன்னுலகிற் குடியேற்றிக்) கையில் அணிந்துள்ள குஞ்சம் தட்டிய, அச்சத்தைத் தரும் அழகிய பரிசுத்தமான பிரகாசிக்கின்ற வேலை உடையவரே! சிதைத்திட்டு அம்புரத்தை (அந்தத் திரிபுரங்களை அல்லது அழகிய திரிபுரங்களை) அழிவுசெய்து, சொல்லப்பட்ட அல்லது புகழ் பெற (கயாசுரனாய் வந்த) யானையிடம் சென்று அதை உரித்து, (தன்) தான் என்னும் அகங்காரத்தாற் கோபம்கொண்ட தக்கனுடைய தலையை (அறுத்துத் தள்ளின சிவனாருடைய செவிக்குள் செம்மைப் பொருளாம் (பிரணவப் பொருளை) (அவர்) கற்கும்படிச் செலுத்திச் செவ்விய மேலான வகையில் அமையப்பெற்ற திருச்சிற்றம்பலத்தில் எழுந்: தருளியுள்ள அழகிய பெருமாளே! (அசுத்திப்பட்டு உழல்வேனோ)