பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகைமாநகர்) திருப்புகழ் உரை 877 6. வாகை மாநகர் 994. (ஆலை) கரும்பு போன்ற மொழிக்கும், ஆளையே உள்ளுடறுக்கும் ஆலகால விஷம் போன்ற விழிக்கும் - காம் இச்சை என்னும் ஆசையைக்கொண்ட மாதர்கள் அழைக்கின்ற ஓசை கொண்ட குரலின் தொனிக்கும், முத்து மாலை அண்ந்த பாரமான கொங்கைக்கும், அ ழகான காதோலைக்கும், பொருந்திய குழையணிக்கும், நெற்றிப் பட்டம் அணிந்துள்ள (பெண்) யானையின் நடைபோன்ற நடைக்கும், (ஒரை) குரவைக் கூத்தில் சாய்வதுபோலச் சாய்ந்துள்ள இடைக்கும், நான் மோகம் கொண்டவனாகி, (ஆறு) காம ஊறல் பாவு அவ் உ றுப்பில்-பரவும் அந்த (உறுப்பில்) அவயவத்திலும், (அந்த ஊறல்ைத் (தேறும் அறியும் (கரிப்பில்) காரமான அநுபவத்திலும், (ஊர ஒடு) தினைவு கொண்டு வேகமாகச்செல்லும் ஆசையிலேயே அலைச்சல் ஊறுவேனோ! வேலையாக வளைக்கை(கைவளை வேலையாக)கையில் வளையலிடும் வேலையைப் பூண்டவனாகி - வளை விற்கும் செட்டியாய் வேடர்பாவை தனக்கு - வேடர் மகளாம் வள்ளிக்கு மீறு காதல் மிக்கெழும் ஆசையை ஊட்டின (முகமாய மாயமுக மாயம் பூண்ட (மாயத்தால் மாநுட உருவம் பூண்ட) திருமுகத்தை உடையவனே! பொருந்தும்படி (வேடை) வேட்கையை-காம நோயைத் தந்தும், பெருமை வாய்ந்த (கோலம்) அழகு உருவங்களைக் காட்டியும், மீண்டும் (இறுதியாக) உண்மையை அறிவித்தும், பரன் மீதிலே. (தொடர்ச்சி) (4) 'சைவநெறி நற்றவ விருத்த வேடமது கொண்டு வரும் வேடரெதிர் சென்றான்" -கந்தபுரா 6.24.94 (5) "கருணை செய்து தொல் லுருவம் காட்டினனே" முந்நான்கு தோளும் முகங்களோர் மூவிரண்டும் கொன்னார்வை வேலும் குலிசமும் ஏனைப்படையும் பொன்னார் மணிமயிலும் மாகப் புனக்குறவர் மின்னாள்கண் காண வெளிநின்றனன் விறலோன் கந்தபுரா 6.24.115, 116. (தொடர்ச்சி 878 ஆம் பக்கம் பார்க்க.)