பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துர்) திருப்புகழ் உரை 871 (உழைக்கன்)இலக்குமியாம் மானின் இடத்தேபிறந்த (பொற்கொடி பெர்ன் கொடி போன்ற அழகு சிறந்த குயிலனைய வள்ளிமீது காதல்கொண்டு அவளை அணைந்த தோளையுடைய கருணைக் கடலே! (வெண்ணெய், தயிர் வைத்திருந்த) உறிக்குள்ளே கையை நீட்டின அச்சுதன் திருமாலின் மருகனே (அல்லது, கட்செவிப் படுக்கையில் உறை மாயன், உழைக்கட் பொற்கொடி - மானுருவில் வந்த பொன்கொடி போன்றவளும், =9|{P35 சிறந்த குயில் போன்றளுமான இலக்குமியின் தோளை அணைந்த கருண்ைக்கடல், உறிக்குள் கையை நீட்டின அச்சுதன் ஆகிய திருமாலின் மருகனே!) உண்மைப் பொருளைத் தெரிவிக்கச் (செட்டியனாய்) ருத்ர ஜன்மர் என்னும் பெயர் கொண்ட செட்டிப் ள்ளைய்ாய்ப், பல சங்கப் புலவர்கள் கூறிய முத்தமிழ்ப் பொருள்களை ஆய்ந்து மதித்து நிறைந்த ஆசுமதுரம், சித்திரம், வி : ரம் என்ப்படும் நால்வகைக் க்விகளிலும் வல்ல (கவிகளுடன்) - ಶ್ಗ அணைந்த - சங்கப் புலவர்களுடன் கூடியிருந்த பெருமாளே! அல்லது நால்வகைக் கவிகளும் கூடிய நால்வகைக் கவிகளிலும் வல்ல பெருமாளே! ஒடுக்கத்துச்செறிவாய் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (பாழ்த்த புத்தியை ஒழியேனோ) 4. காமத்துார். 992. (ஆகத்தே) உடலிலே (தப்பாமல்) குறி தவறாது சேர்) வந்து படுகின்ற (இக்கு ஆர் கை) கை ஆர் இக்கு - (மன்மதனது) கையில் உள்ள கரும்பு ஃ.ே புறப்படும் (தேறல்) மது நிறைந்த (மலர்ப்) பானங்களாலும். (ஆலம்) விஷம் கொண்டதாய், (பாலைப்போல) பால் போலும் வெண்ணிறத்ததாய், (கோலத்து ஆய) அழகு வாய்ந்ததான (காயம்) உடலை உடைய நிலவாலும். பலர்புகழ் நன்மொழிப் புலவரேறே - திருமுருகாற்றுப்படை பெருந்தமிழ் விரித்த அருந்தமிழ்ப் புலவன் - கல்லாடம் கொழுந்தமிழ் உணரு முதற் புலமைக் குக கொட்டுக சப்பாணி' - திருவிடைக்கழி பிள்ளைத் தமிழ்.