பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிச்சயம்) திருப்புகழ் .פ-ó781 תתתה சமர்த்தரிற் சமர்த்தனே (சாமர்த்திய்த்தில் முதல் ஸ்தானத்தில் இருப்பவனே!) (பச்சிமத்திசைக்குள்) மேற்குத் திசையில் உள்ளதும், உத்தமமான ஸ்தலமுமான தனிச்சயம் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பிள்ளைப் பெருமாளே! (இப் பிறப்பினித் தவிராதோ) 959. எல்லாரும் புகழும்படியாக (சம்பிரமமாக) மிக ஒழுங்காக இருந்த வடிவமானது திரங்கி - வதங்கல் உற்று சுருங்கலுற்று, கறுப்பாயிருந்த தலைமயிரும் வெளுத்துப் ಳ್ದಿ நன்றாக ஒலிகளைக் கேட்டிருந்த காது செவிடாகி, ஒளி பொருந்தியிருந்த கண் குருடாகி. பலத்துடன் அழுத்தமாயிருந்த வெண்ணிறப் பல்லும் நழுவி விழுதலுற்று, மதம் - நான் என்றிருந்த இறுமாப்பு நிலை அழிந்து, மூச்சு வாங்கி, கிண்கின் ಶ್ಗ ஒலியுடன் இருமல் உண்டாகி, வேதனையுடன் தலை கிறுகிறு என்னும் பித்தமும் மேல் கொண்டு எழ ரத்தம் இல்லாத புழுவைக் காட்டிலும் அதிகமாக (உடல்) வெளுத்து, மனம், செயல். வாக்கு இவைகள் ஒரு அளவு கடந்துங்கினமான நிலையை அடைந்து, சேர்ந்துள்ள மாதர்களும் வர இகழ்ந்து துாஷித்து, யாவரும் (இவன்) அசுத்தன் - அழுக்கன் என்று சொல்லும் படியாக, உணர்ச்சி குறைந்துபோய், நாடி துடிப்பதும் சிறிதே இருக்கின்றது - இல்லை என்றே சொல்லலாம் - என்னும்படியான கஷ்டநிலை வந்து கூடி உயிர் வேதனைப்படும் அந்த நாளில் நீ எனக்கு அருள் புரிவாயக. திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட்.......... டி-குடிகு டிண்டிட் டிகு திதோ திமித்தி மிந்திமி திமிதிமி யென்று ஒலிக்கும்படி (இடக்கை) இடக்கையாற் கொட்டம் தோற்கருவி, (துந்துமி) பேரிகை, (முரசு) பறைப் பொது இவையெலாம் ஒலிக்க, போர்க்களத்தில் அசுரர்கள் திகைக்க - கலக்கம் கொள்ளச் சில பேய்கள்