பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிச்சயம்) திருப்புகழ் உரை 779 தனிச்சயம் 958. சுருட்டிய வெற்றிலையைக் கொடுத்து (அணைத்தலத்து) படுக்கை யிடத்தில் இருக்க வைத்தும், (மட்டைகட்கு) பயனற்ற முட்டாள்களுக்கு இன்பம் தரக்கூடிய புட்குரல்களை விடும்படிக் காமப்பற்றை எழுப்பியும், նՅՈԼD) பூசப்பட்டதும், கயல்மீன் போன்றதுமான கண்ணிலும் கழுத்திலும் முத்தம் தந்து அனைத்தும், எடுத்தும், வாயிதழைக் கடித்தும், மார்பிடத்தே தாவியும் அலைச்சலுற்று, நாணத்தை விட்டு, அரைப்பை (அரையை) (பாம்பின் படம்போன்ற அல்குலைத் தொட்டு, (அந்தக்காமலீலைகளிலேயே) உழைப்புற்று உழைப்புற்று, துன்பம் அடைந்து உயிர் களைத்துப் போகும் அளவுக்கு மிகவும் தவிப்பு அடைந்து இளைப்பு உற (மாதர்களின்) கொங்கையிற் சேர்க்கையுற்று அலுத்துப்போகும் இந்த பிறப்பு இனியேனும் ஒழியாதோ - நீங்காதோ! கொலை செய்வதிற் பெருமை கொள்ளும் அரக்கர்களைக் கலங்கச் செய்த (திருக்கரத்த) மேம்பட்ட கோழிக் கொடியைத் திருக்கரத்தில் உடையவனே! அழகிய தலங்கள் தோறும் (உன்னைப்) பாடும்படியான நோக்கத்தைக் கொண்ட நல்ல திருப்புகழிற் பிரபுஸ்தானமான (மிக மேம்பட்ட நிலையதான) க்விப்ாடும் குருஸ்தானத்தில் என்னை நிலைக்கவைத்துக் கட்டளையிட்டு அருள் புரிந்தவனே! தலையிற் சுமைபோற் பாரமான சடையைக் கொண்ட சிவபிரானுக்கும், உன்னிடத்தே இலக்கணம் - க்கியம் எல்லாம் கற்ற, இயல், இசை நாடகம் என்னும் முத்தமிழ் வல்ல அகத்திய முநிவருக்கும், ஞானோபதேசம் செய்த வேலா சரணஞ் சரணமென் மேல்வெகு ளாமலினி மேலா யினுங்கடைக் கண்பார் பருப்பத வேந்தன்மகள் பாலா குறுமுனி யார்க்குந் திருப்புகழ் பண்ணவர்க்கும் ஆலால முண்டவர்க் கும்முய தேசித்த ஆண்டவனே."