பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

622 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை நாரணி யறத்தி னாரி ஆறுசம யத்திiயூத நாயக ரிடத்து காமி #மகமாயி. நாடக நடத்தி கோல நீலவரு ணத்தி வேத நாயகி யுமைச்சி நீலி திரிசூலி, வாரணி முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக வாணுத லளித்த வீர மயிலோனே. மாடமதில் முத்து மேடை கோபுர மணத்த சோலை வாகுள குறட்டி மேவு பெருமாளே, (2) அத்திப்பட்டு. (புதுக்கோட்டைக் கடுத்த கந்தர்வ கோட்டையிலிருந்து 7-மைல். தென் ஆற்காடு ஜில்லா திருவெண்ணெய் நல்லூர், குறிஞ்சிப்பாடி ஆகிய சப்டிஸ்டிரிக்டுக்களிலும், வடஆற்காடு ஜில்லா செங்கம் சப்டிஸ்டிரிக்டிலும், செங்கற்பட்டுஜில்லா சைதாப்பேட்டை சப்டிஸ் டிரிக்டிலும் அத்திப்பட்டு' எனப்பெயரிய கிராமங்கள் உள்ளன.) 899. திருவடியைப் பெற தனதனன தனதனன தத்தத் தத்ததன தனதனன தனதனன தததத ததததன தனதனன தனதனண தததத ததததன தனதான கருகியறி வகலவுயிர் விட்டுக் கிக்கிளைஞர் கதறியழ விரவுபறை முட்டக் கொட்டியிட கனகமணி சிவிகையில மர்த்திக் கட்டையினி லிடைபோடாக்.

  • "ஆறு சமயத்தி". "சமயம் ஆறும் தலைவி இவளாயிருப்ப தறிந் திருந்தும்"

அபிராமி அந்தாதி 63, "உத்தமி முன் காத்த மதம் ஆறும்" - கச்சி ஆனந்தது.ாது-45, "ஆண்ட நாயகி சமயங்கள் ஆறும்" பெரியபுரா-திருக்குறிப்பு-84 "சமயம் ஆறினையும் தாயென வளர்த்து" . கந்த-நகர-78. (தொடர்ச்சி 623 ஆம் பக்கம் பார்க்க)