பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/991

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை அம்புவித_ணக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை அன்பொடுது திக்கமன. மருள்வாயே; தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற tசந்திரவெ ளிக்குவழி யருள்வாயே. #தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர் சம்ப்ரமவி தத்துடனெ யருள்வாயே! மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன முன்றனைநி னைத்தமைய அருள்வாயே. Sமண்டலிக ரப்பகலும் வந்தசுய ரட்சைபுரி வந்தனைய புத்தியினை யருள்வாயே; $கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையிலப்பரருள் கொண்டுஉட லுற்றபொரு எாருள்வாயே. வேலுஞ் செஞ்சேவலும் செந்தமிழாற் பகர் ஆர்வம் ஈ (கந்தர் அலங் - 52) | tசந்திரவெளி பாட்டு 24 பார்க்க இது யோக நிலையிற் காண்பது: 'தாணுவிற் சந்திரன் தானும் தலைப்படு தன்மையைச் சந்தியிலே கண்டு சமாதியுடை யொளியோகியே" திருமந்திரம்704 + அருணகிரியார் காலத்திற் பெரும் புலவர்கள் பல்லக்கு முதலிய விருதுகளைக் கொண்டிருந்தனர். (பாட்டு 80 பார்க்க) 9 நாட்டு அரசர்களும் அருணகிரியாரை எவ்வளவு உயர்வாக மதித்திருந்தார்கள் எங்கனம் அவருடைய சுபரட்சையை, மங்கல ஆசியைப் பெற விரும்பினார்கள் என்பது. "ஆடாதனேன் மிகப் ப்ரசித்திபெற்று - எத்திசைப்புறத் தினும் ஏடேவு ராஜதத்தினைப் பணித்தது(ம்) - மறவேனே . திருப்புகழ் 1132 என் வருவதால் அறிதலாகும். 1 ராப்பகல் என்பது ரப்பகல் என்றாயிற்று. $ இந்த ஏழாவது அடியில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் முதலையுண்ட பாலனை உயிர் பெற்றுவர எழுப்பினாரே அந்த ரகசிய வழியை எனக்கும் அருளுக என_அருணகிரியார் வேண்டுகின்றனர். மதலையை எழுப்பின இடம் அவிநாசிப் புக்கொளியூர் - இது கொங்கு நாட்டைச் சேர்ந்தது. அருணகிரியார் காலத்திற் கொங்கு நாட்டில், தென்கரை நாட்டுப் பகுதியில் சேர்ந்ததாயிருக்கலாம். - (அடுத்த பக்கம் பார்க்க)