பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/986

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . தென்சேரிகினி திருப்புகழ் உரை 513 தென்சேரிகிரி 396 எங்கேயாவ வர் வரக் கண்டால் ங்கே கண் | لئے கொண்டு இனிமையாகப் பார்த்து அழைத்து, இங்கு யார்தான் உன் மீது மோகம் கொள்ளமாட்டார் என்று கூறி. இந்தா, என்னுடைய இனிய வாயிதழ் ஊறல், அதைத் தரும் என்ன்ன்ப் பொருந்திச் சேர்வாயாக என்று ஆசை மொழிகளை மனம் குழையக் கூறியும், கண்ணிணைகளை ஆட்டி அசைத்து, தாமதிக்காமல், வந்தவர்களுக்கு உளதான பொருளையும், உயிரையும், சந்தேகம் இல்லாமல் அடியோடு பறித்துக் கொள்ளும் மான்போன்ற பொது மகளிருடைய சங்கீதமும், சேர்க்கையும் நன்மை தரும் என்று (அல்லது சங்கீதம், சேர்க்கை இன்பம் என்று) ஒதப்படும் காமக் கடலினின்றும் கரையேற் குளிர்ச்சி மிக்க உன்து திருவருனைத் தந்தருளுக. சங்கும் சக்கரமும் கொண்டு, பொருந்திய, பதுக் கூட்டங்க்ளின் பின், சந்து (தொளை அல்லது இசை) நிரம்பிய மூங்கிற் குழலை (புல்லாங்குழலை) ஊதி. தம் மேற் கொண்ட ஆசையைக் கடக்க (நிறைவுறச்செய்ய) மன எழுச்சியைக் கொண்ட் பெண்களின் ஆடையை எடுத்துக் கொண்டு மரத்தில் ஏறின. (முன் பக்கத் தொடர்ச்சி) S உகள - கடக்க 1 ஏழு மடவியர்கள் . ஏழு - எழும்; கண்ணனைக் கணவனாகப் பெறும் பேற்றை விரும்பி, யமுனையில் நீராடி நின்ற கோவியருடைய துகில்களை யெல்லாம் வாரிக்கொண்டு கண்ணபிரான் குருந்த மரத்தில் ஏறினர் என்ப. " விரைவினில்வந் தாய்ச்சியர் பொற் கலைகள் வாரி வெறிய மலர்க் குருந்தேறி நகைத்து நின்றான் அம்பரமெல்லாம் வாரி அழகிய குருந்தினேறும் உம்பர்கள் பெருமான்" (வரதராசர் - பாகவதம் கூறைகொள் படலம்) H குருந்திடைக் கூறை பணியாய்". (ஆண்டாள் பாசுரம்)