பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/976

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - ஞானமலை திருப்புகழ் உரை 503 வந்தவர்கள் தங்கள் பக்கம் சாயும்படி (இணங்கும்படி) வெகு மாயப்பொடியைப் படும்படி அவர்கள்மீது துாவிச் சரீரத்தைத் தட்டிக் கொடுப்பவர்களாம் (வேசையர்களது) உறவு ஆமோ (உறவு கூடாது என்றபடி) வேதம் (வல்ல) முநிவர்கள், குழந்தைகள், மாதர்கள், வேதியர்கள் ந்களைப் போர் நடக்கப் போகிறதென்று அப்புறப்படுத்தி விட்டு, o (மிக்கு வந்த) மேலிட்டு வந்த அசுரர்கள் அழிந்து விழ, அலைகடல் ஏழும் வற்றிச் சேறாகச் செலுத்தின வேல்னே! சிவபிரானுடைய இடது பாகத்தில் உள்ள மாது, சிவகாமி, நாரி, அபிராமி அருளிய பாலனே!

ஈன்ற மகள் (வள்ளியுடனே)

ரும ஞானமலையில் ம்பி வீற்றருக்கும் பெருமாளே! (மாயதுாளியுற ஆகதாடியிடுவோர்கள் உறவாமோ) 392 மனையாள் நகைக்க, ஊரில் உள்ள யாவரும் நகைக்க, உலகிலுள்ள மகளிர் நகைக்கத் தந்தை, சுற்றத்தாரோடும் மனம் சலிப்ப (வெறுப்பு அடைய), அடியேனும் உள்ளம் வெறுப்ப, யாவரும் பழிப்பு மொழியைப் பலகால் ஆராயாது பேசி நாள்தோறும் அடியேனை எல்லாரும் இழிவாகப் பேச, எண்ணமிடும் மனத்தில் இருள் மிகுந்து, யோசித்துப் பார்த்தால் நான் (பிறப்பை) எடுத்த இன்பம் இதுதானோ என்று \ (முன்பக்கத் தொடர்ச்சி) "ஆவும் ஆனியற் பார்ப்பன மக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ திரும் எம்மம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்" - புறநானூறு - 9. " தாபதர், நோயோர், பெண்டிரும் நும்மரண் ஏகுதிர் பெட்டென்று. பறை சாற்றி" - (காஞ்சிப்புரா - நாடு -21)