பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 முருகவேள் திருமுறை 12 - திருமுறை உரைக்கும் வீரிகள் கோளர வாமென வுடற்றுந் தாதியர் காசள வேமனம் உறைக்குந் துாரிகள் மீதினி லாசைகள் புரிவேனோ , அருக்கன் போலொளி வீசிய மாமுடி யனைத்துந் தானழ காய்நல மேதர அருட்கள்ை பார்வையி னாலடி யார்தமை மகிழ்வோடே. அழைத்துஞ் சேதிகள் பேசிய காரண வடிப்பந் தானென வேயெனை நாடொறும் அதிக்கஞ் சேர்தர வேயரு ளாலுட னினிதாள்வாய், இருக்குங் காரண மீறிய வேதமும் இசைக்குஞ் சாரமு மேதொழு தேவர்கள் இடுக்கள்ை தீர்கன னேயடி யார்தவ முடன்மேவி. இலக்கந் தானென வேதொழ வேமகிழ் விருப்பங் கூர்தரு மாதியு மாயுல கிறுக்குந் தாதகி சூடிய வேணிய னருள்பாலா; திருக்குந் தாபதர் வேதிய ராதியர் துதிக்குந் தாளுடை நாயக னாகிய செகச்செஞ் சோதியு மாகிய மாதவன் மருகோனே. செழிக்குஞ் சாலியு மேகம ளாவிய கருப்பஞ் சோலையும் வாழையு மேதிகழ் திருச்செந்தூர்தனில் மேவிய தேவர்கள் பெருமாளே. (12)