பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/856

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . இரத்னகிரி திருப்புகழ் உரை 383 (வேடன், வேங்கை, செட்டி, முதியோன் ஆகிய வேடங்களைக் காட்டி) ஏமாற்றி, ஒப்பற்ற மான் பேர்ன்ற வள்ளியின், தினைக்காவலில் வல்லவிளான் பூவையின் நாகண் வாய்ப்புள் போன்ற வள்ளியின், உள்ளத்தை அலைத்த (கலக் வித்த) காமுகனே (காமம் கொண்டவனே): `ಸ್ಲಿ) ரத்னகிரி எனப்படும் வாட்போக்கித் தலத்தில் வாழும் முருகனே! என்றும் இளையவனே! தேவர் பெருமாளே! (முடியாத பதம் அருள்வாயே) 349 பத்தி பூண்டு நான் உன்னைப் பலகாலும் (எப்பொழுதும்) பற்றி (உள்ளத்தில் தியானித்து) சிறந்த உனது திருப்புகழ்களைப் பாடி முத்தனாமாறு (மோட்சநிலை --ஞானநிலை பெற்றவனா மாறு) என்னைப்பெருவாழ்வாகிய (சிற்ந்த வாழ்வாகிய) முத்திநிலையிற் சேர்வதற்கு (நான் முத்திநிலையை அடைய) அருள்புரிவாயாக. உத்தமனே! ஈகைக்குணம் உள்ள நற்குணத்தவர்களுக்கு நேசனே! (அல்லது உத்தம ஆதான சற்குணர் நேயா - உத்தம குணங்கள் சேர்ந்துள்ள சற்குண்ர்களுக்கு நேசனே! ஆதானம் - வைக்கை, பற்றுகை) ஒப்பு இல்லாத (நிகரில்லாத) சிறந்த மணிக்கிரி (இரத்னகிரி) வாசனே! வித்தகா (ஞானியே)! ான பக்கவம் டைக்கவர்க் அநுக்கிர்க கேதிே திேன்ே குவம அடைநத @ வெற்றி வேலாயுதத்தை ஏந்தும் பெருமாளே! (முத்தியே சேர்வதற் கருள்வாயே) (முன் பக்கத் தொடர்ச்சி) திருக்கை; இரண்டாஞ் சத்திநிபாதமாவது அந்தக் கர்த்தாவைப் பெறுகைக்கு வழி எப்படி என்று ஆராய்கை மூன்றாம் சத்திநி பாதமாவது அப்படி ஆராய்ந்தறிந்த கர்த்தாவைப் பெற வேணுமென்று பிரபஞ்சத்தை உவர்த்தும் புளியம் பழமும் அதன் தோடும் போல நிற்றல்; நான்காம் சத்திநி பாதமாவது பிரபஞ்சத்தை முற்றத் துறந்து ஆசாரியனே பொருளென்று கொண்டு தானற நின்று வழிபடுகை "கர்த்தா ஆசாரிய மூர்த்தமாக வந்து இரட்சிக்கு மிடத்துக் கேவலாவத்தையும் சகலாவத்தையும் நீக்கிச் சுத்தா வத்தையிலே நிறுத்துவன்". சிவப்ரகாச உரை சூ 2-49,