பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/773

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 319. உண்மைப் பொருளைக் காண தனதன தனதன தனதன தனதன தய்யத்த தாத்த தனதான ககனமு மநிலமு முனல்புனல் நிலமமை கள்ளப் புலாற்கி ருமிவீடு. கனலெழ மொழிதரு சினமென மதமிகு கள் வைத்த தோற்பை சுமவாதே; யுகஇறு திகளிலு மிறுதியி லொருபொருள் உள்ளக்க னோக்கு மறிவூறி. ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி tலுள்ளத்தை நோக்க அருள்வாயே ம்ருகமத பரிமள விகசித நளினநள் வெள்ளைப் பிராட்டி Sஇறைகாணா. "விடதர குடிலச டிலமிசை itவெகுமுக வெள்ளத்தை யேற்ற பதிவாழ்வே! 'அநிலம் காற்று. t உள்ளவர் காண வந்தருளாய்" - திருவாசகம் 22-1. 4 நளின நள் வெள்ளைப் பிராட்டி இறை சரசுவதி தேவியின் நாய கனான பிரமன். வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்து வீற்றிருப்பாள்" என்றார் சரசுவதியை காளமேகப் புலவர். S யாமே பரம், யாமே பரம் என்று பிரமனும் திருமாலும் தர்க்கித்துப் போர் புரியும்போது அவ்விருவர் நடுவில் பெரிய சோதி மலையாய் நின்றனர் சிவபிரான். அன்னமாய்ப் பிரமன் முடியைத் தேடியும், பன்றியாய் நிலத்தைக் கிண்டு திருமால் தேடியும் அடிமுடி காணக் கிடைக்காமல் இருவரும் அயர்ந்தனர். இதுவே திருஅண்ணாமலை" (அண்ணா எட்ட முடியாத) 'மணிகொண்ட நெடுங்கடலில் விழிவளரும் மாதவனும் அணிகொண்ட புண்டரிகம் அகலாத சதுமுகனும் ஞானக்கண் ணதுகொண்டு நாடுமா றுணராதே ஏனத்தின் வடிவாகி எகினத்தின் வடிவாகி