பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/701

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை சஞ்ச ரீகரி கரமுரல் தமனிய கிண்கி னிமுக வித'பத யுகமலர் தந்த பேரருள் கனவிலு நனவிலு மறவேனே, سمي tசிந்து வாரமு மிதழியு மிளநவ சந்த்ர ரேகையு மரவமு மனிதரு செஞ்ச டாதரர் திருமக வெனவரு முருகோனே. செண்ய காடவி யினுமித னினுமுயர் சந்த னாடவி யினுமுறை குறமகள் செம்பொ னூபுர கமலமும் வளையணி புதுவேயும் , இந்து வாண்முக வனசமு ம்ருகமத குங்கு மாசல யுகளமு மதுரித tஇந்த ளாம்ருத வசனமு முறுவலு மபிராம. Sஇந்த்ர கோபமு மரகத வடிவமு 'மிந்த்ர சாபமு மிருகுழை யொடுபொரு மிந்த்ரநீலமு trமடலிடை யெழுதிய பெருமாளே. (41) 'இது அருணகிரியார் திருவடி தீட்சை பெற்ற வரலாற்று விவரம் கூறுவது; திருவண்ணாமலைப் பதிகத்தில், அருணை நகர் மிசை கருணையொ டருளிய பரம ஒரு வசனமும் இருசரணமும் மறவேனே" (513) என வருவதைக் காண்க. t சிந்து வாரம் - நொச்சி. இது சிவபிரான் சூடுவது. நொச்சியே வன்னி கொன்றை மதி கூவிளம் உச்சியே புனைதல் வேடம் விடை யூர்தியான்" சம்பந்தர் II-12-2; வஞ்சி பித்திகம் சிந்து வாரம்" சிந்துவாரம் - கருநொச்சிப்பூ - குறிஞ்சிப் பாட்டு 189 உரை.

  1. வள்ளியின் சொல் . பண் போன்றது. பண்கள் தங்கு அடர்ந்த இன்சொல் ரஞ்சிதாம்ருத வசனம் திருப்புகழ் 96, 97

S இந்த்ர கோபம் - வாய் இதழுக்கு உவமை. இந்த்ர கோபம் ஒத்த தொண்டைது.வண்டு அமுதந்தர திருப்புகழ் 1148 ” இந்திர சாபம் - துதல் (நெற்றி), புருவத்துக்கு உவமை இந்த்ராதி சிலை தோற்ற நுதல் (திருப்புகழ் 390) 231ம் பக்கம் பார்க்க