பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/651

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை பரவி 鄲 முனதுதின மனமகிழ் - பணிதிகழ் தணிகையி ". லுறைவோனே. பகர்தரு குறமகள் தருவமை வநிதையு - மிருபுடை யுறவரு பெருமாளே. (22) 271. திருப்புகழ் அடியார்களைப் போற்ற தனத்தன தனத்தன தனத்தன தனத்தன தனத்தன தனத்தன தனதான tஇருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கினை யறுத்திடு #மெனவோதும். 'திருப்பாற்கடல் கடைந்தபோது மத்தாகிய மந்தர மலையிற் கயிறாக அமைந்து இழுக்கப்பட்ட படியால் வாசுகி என்னும் பாம்பின் உடல் புன்னாயிற்று. வாசுகி தணிகைக்கு வந்து தணிகேசரைப் பூசித்து நோய் நீங்கிச் சுகப்பட்டது. (தணிகைப் புராணம்) இங்கனம் ஆதிசேடன் பூசித்தான் எனத் தணிகாசல புராணம் கூறும் நாகம் தணிகையிற் பூசித்ததை விஷ ஐந்து தலை அரவு தொழுகின்ற தணிமலை" எனவரும் திருப்புகழிலும் (307) காண்க. 1.இருப்பவல் திருப்புகழ் இரும்பு அவல் திருப்புகழ் எனக் கொண்டால் . அது திருப்புகழின் உரத்தை (பெரு வன்மையைக்) காட்டும்; அவ்வன்மையைச் சினத்தவர் முடிக்கும் என்னும் 23 ஆம் பாடலிற் கiண்கின்றோம். அவல் போல உண்ணலாம், உண்டபின் உண்ட நெஞ்சறி தேனை (திருப்புகழ் 46) காணலாம். இரும்புபோல உரம் (மனோ திடம்) பெறலாம். அந்தக்ா வந்து பார் சற்றென் கைக் கெட்டவே" (கந் அலங் 25) என் யமனையும் அறை கூவி அழைக்கும் திடத்தைப் பெறலாம். இனி இருப்பவல் திருப்புகழ்' என்பதை இருப்பு அவல் எனக் கொண்டே திருப்புகழ் கையிருப்பிலே உள்ள அவலைப் போன்றது. காலன் ஊர்க்குச் செல்லும் நெடுவழிப் பிரயாணத்தில் உபயோகப்படும் அவல் அது அருணகிரிநாதர் கந்தனுக்கு ஒரு வகை அவல் கொடுத்தார். குசேலர் அளித்தது நெல் அவல், அருணகிரிநாதர் கொடுத்தது சொல் அவல்." என அருமையாகப் பொருள் காண்பர் பிரம அ திவா. ஜகந்நாதையர் அவர்கள் (பெரும்பெயர் முருகன் - பக்கம் 147 - 149) இப்பொருள் "இருப்பு வல்திருப்புகழ்" என்ற பாடபேதம் ஒன்றாலும் வலி பெறுகின்றது. (179 - பக்கம் பார்க்க) 21