பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 425 மேலான உண்ழை உடையதான தாயின் அன்புடன் மெய்யான பக்தியின் சேர்க்கையையே நான் பெறுமாறு என் உள்ளம் குளிரும் புத்தியை எனக்கு நீ தர் வந்து அருள்புரிவாயர்க == கற்ற தமிழ்ப் புலவனாகிய பூ சுந்தரமூர்த்தி சுவாமிகளிடத்தில் மகிழ்ச்சி பூண்டு, ஒரு பொற்கொடி போன்ற அவர் மனைவி பரவையார் களிப்புற, தாம் இட்ட கட்டளைப்படி வந் குவிந்த ந்ெல்மலையை அளித்த (மூல) காரணராம் வபிரான் அருளிய பாலனே! கற்பகமரங்கள் நிறைந்த நகராம் (பொன்னுலகத்துத் தலை நகர்) அம்ராவதியில் உள்ள வெள்ளையானை (ஐராவதம்) போற்றி வளர்த்த மாது தேவசேனையை அணைந்த அழகிய திருப்புயங்களை உடையவனே! 'கரிய மேகநி டய தேவர் தலைவனாம் இந்திரன் பயப். பட்ட பொழுது (அவனுக்குத் திரு அருள் பாலித்த கருணைக்கு உறைவிடம்ே என்று நாள்தேர்றும்நல்ல தவசிகள் அருச்சனை செய்ய, திருபாகர மூர்த்தி என் மியிலே புகழ் வளர்ந்திருக்கின்ற சங்கேந்திய தேவன்' திருமால் ழ்ச்சி மிகக்கொள்ளும் மருகனே! நட்டுவர் முழக்கும் மத்தளத்தின் முழக்கந்தானோ என்று யுறும் படி, கருமேதக் கூட்டங்கள் மிகவும். ஒலியைப் பருக்கும் நல்ல பழநிப் பதியிற் செழிப்புற வீற்றிருக்கும் பெருமாளே! (பத்தியின் இணக்கமே பெற, புத்தியை எனக்கு நீ தர வருவாயே) மைப்புயல் (கரியமேக நிறத்தனன் இந்திரன் - இந்திரனுக்குக் தரியவன்" என்று ஒரு பெயர் - மணிமேகலை - 25 - 5. சூர்ாதியர் பொருட்டு இந்திரன் ந்ச அவனுக்கு அருளினர் எனவும், முருகவேள் திருவிளையாடல் :: அவரை இறைவரென அறியாது ஆவருடன் பொருது மாய்ந்து பின்பு அவரால் எழுப்பப்பட்டபொழுது, தான் செய்த பிழையை எண்ணி இந்திரன் அஞ்ச முருக்வேள் அவனது பிழையைப் பொறுத்து அருளினர் எனவும் கொள்ளலாம். t மேக முழக்கம் மத்தள முழக்கத்துக்கு உவமை கூறப் பட்டது. முழவதிர மழையென்றஞ்சி, சிலமந்தி அலமந்து முகில் பார்க்கும் சம்பந்தர் தேவாரம் 1-130 - 1.