பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 முருகவேள் திருமுறை 13- திருமுறை 'பதினொரு ருத்தி ராதிகள் தயணம் விளக்கு மாளிகை பரிவொடு நிற்கு மீசுர சுரலோக பரிமள கற்ப காடவி அரியளி சுற்று பூவுதிர் பழநி மலைக்குள் மேவிய பெருமாளே (70) 170. திருவடி பெற தனன தானன தானன தானன தனன தானன தானன தானன தனன தானன தானன தானன தனதான கரிய மேகம தோ இரு ளோகுழல் அரிய பூரண மாமதி யோமுகம் கணைகொ லோஅயில் வேலது வோவிழி யிதழ்பாகோ. கமுகு தானிக ரோவளை யோகளம் அரிய மாமல ரோதுளி ரோகரம் கனக மேரது வோகுட மோமுலை மொழிதேனோ, கருணை மால்துயி லாலிலை யோவயி றிடைய தீரொரு நூலது வோவென கனக மாமயில் போல்மட வாருடன் மிகநாடி கசட னாய்வய தாயொரு நூறுசெல் வதனின் மேலென தாவியை நீயிரு கமல மீதினிலேவரவேயருள் புரிவாயே பதினொரு ருத்திரர். மாதேவன், அரன், உருத்திரன், சங்கரன், நீல லோகிதன், ஈசானன், விசயன், வீமதேவன், பவோற்பவன், கபாலி, செளமியன் (பிங்கலம்). ".