பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 383 புலாலை (மாமிசத்தை)க் கலந்து, ஒலிக்கின்ற மணியுடனே, புது மலர்களைச் சூடியுள்ள் ஒளி செய்யும் வேன்ல் ஏந்தினவனே! புனுகு ಶ್ಗ வீச மணந்துகொண்ட குறமகள் வள் ன் கென்னங் ႕”" போன்ற கொங்கைகள் தாக்குதலால் மொட்டு விரிந்த மாலை மார்பனே! பல நிறங்கள் நெருங்கியதாய், விழுந்துபோகும் தன்ழையை உடைய சிறகுகள் பரந்து ரும் பருத்த மயிலை அடைந்துள்ள குக வீரனே! மூங்கில்கள் வேலைப்பாட்டுக்குத் தக்கதான சிறந்த முத்து மணிகளை உதிர்க்கும் பழநி மலையில் வந்து அமர்ந்துள்ள பெருமாளே! (அவர் குடிபுகுந்த நினைவொடும் இறந்து படலாமோ) 165 உயிர் (இவ் வுடம்பெனும்) கூட்டை விடும் வரையில் (உயிர் உள்ள அளவும்) உம்மைக் கூடியிருக்கும் தொழிலை ஒரு போதும் நழுவ விடுவதில்லை என்று சபதமொழியைக் கூறி, முன்பு தாம் சேர்ந்திருந்தவரை வெறுத்து (விலத்தி), (எனது) பொன் முதலிய திரவியங்களை (சேமநிதிப் பொருளை எல்லாம்) அடையப் பெற்று, பின்னர் வருபவர்களின் எதிரே போய் - இரகசியப் பேச்சுக்களை (ஜாடைப் பேச்சுக்களைப்) பேசி இரவும் பகலும் త్థ இஷடமான வார்த்தை கிள்ைப் பல்விதமாகப் பசி, அவர்களிடம் உள்ள பொருள்களைக் (கொள்ளை) கொள்ளும் விலைமாதர். களுடைய - படவலையிலும் (பாம்பின் படம்போன்ற அல்குல் வலையிலும்) பார வலையிலும் (கொங்கை வலையிலும்) - (அல்லது சீலை அல்லது சட்டையணிந்த கொங்கை வலையிலும்) படுதலைத் தவிர்த்து என்னை ஆண்டருள மணிபுனைந்துள்ள பதங்களைக் (கால்களைக்) கொண்ட (அல்லது கால்களையும் ஊக்கத்தையும் உடைய) மயிலின் மேல் வந்தருள வேண்டும்.