பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

638 முருகவேள் திருமுறை 16ஆம் திருமுறை பணிய அருள்சிவ மயத்தைக் காட்டு குமர * குலமலை யுயர்த்திக் காட்டு பரிவொ டணிமயில் நடத்திக் காட்டு பெருமாளே. (14) 447. பிறவியற தனதன தத்தத் தனதன தத்தத் தனதன தத்தத் தனதன தத்தத் தனதன தத்தத் தனதன தத்தத் தலைமயிர் t கொக்குக் கொக்கந ரைத்துக் கலகலெ னப்பற் கட்டது விட்டுத் தளர்நடை பட்டுத் தத்தடி யிட்டுத் தடுமாறித். தடிகொடு தத்திக் கக்கல்பெ ருத்திட் டசனமும் விக்கிச் 4 சத்தியெ டுத்துச் சளியுமி குத்துப் பித்தமு முற்றிப் பலகாலும், திலதயி லத்திட் டொக்கவெ ரிக்கத் S திரிபலை சுக்குத் திப்பிலி யிட்டுத் தெளியவ டித்துற் றுய்த்துடல் செத்திட் டுயிர்போமுன். தனதானா

  • குலமலை என்பது சோலைமலை. "குலமலை கோலமலை குளிர்மாமலை கொற்றமலை நிலமலை நீண்டமலை திருமாலிருஞ் சோலையதே"

- பெரியாழ்வார் திருமொழி 4.3-5. t தலைமயிர் கொக்குக்கு ஒக்க நரைத்து. " மீனுண் கொக்கின் துவியன்ன வாணரைக் கூந்தல்" - புறாநானுாறு 277, "குயிலொத் திருங்குஞ்சி கொக்கொத்து" 11ஆம் திருமுறை - சேத்திரத் திருவெண்பா 12. (அடுத்த பக்கம் பார்க்க)