பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 91 உழைப்பதால் வரும் சங்கடத் துன்பங்களைக் கொண்டவனாகிய நான், சுகமான பண்டங்களை இனிமை கண்டு உண்டு, உண்டு, உடலாம் பிண்டம் பருத்து இன்று இப் பூமியில் அலையாமல், உதிக்கின்ற செஞ்சூரியன் வீசும் ஒளிக்கு ஒப்பானதாய்ச் சிவந்த தன்டையையும், மேல்ான கின்கிணியையும் ஆ செவ்விய பஞ்சு போன்றதாயுள்ள (உன்) திருவடியிற் சேர்த்தருளுக; தழைத்துள்ள கொன்றையைச் செம்பொன் போன்ற சடையிற் நெருப்பைத் தங்கும்படியாக அழகிய ILI செவ் (தனது) திருக்கையிற் சேர்த்தும் உள்ள பெருமானாருடைய - ஒப்பற்ற பாதத்தின் புறத்திலும் சிறந்த, பர மண்டலத்திலும், தாமரை இருப்பிலும் உலவி நிற்கும் சங்கரிக்கு என்றும் (மகிழ்ச்சி தரும்) பெருவாழ்வே சிறந்த பிள்ளையே! குத்துக்கோல் (அங்குசம்) கொண்ட யானை (இவள்ளை யானை) வளர்த்த தேவ்சேனை, மான் (வாயிற்றிற் பிறந்த) வள்ளி இருவரும் எப்போதும் செழிப்புற (அவர்களுடைய) கயல் மீன் போலுங் கண்களுக்கு இன்பம் அளிக்கும் திண்ணிய புயங்களை உடையவனே! கறுத்த மேகம்போலப் பொங்கி யெழும் கடல் சங்கங்களைக் கொழிக்கின்ற (திருச்) செந்துரை (இடமாகக்) கொண்டு அன்புடன் (அத் தலத்தில்) வி ற்றிருக்கும் பெருமாளே! (செம்பஞ் சடிசேராய்) 1. சதகோடி சூரியர்கள் உதயமென, ஒரு சோதி வீசுவதும். மணநாறு சீறடியே - சீர்பாத வகுப்பு. 2. பார்வதி தாமரையில் வீற்றிருப்பது: முக்கண்ணி விரும்பும் வெண் தாமரை" - திருமந்திரம், 1067 "அi |யமேல் திருந்திய கந்தளி" அபிராமி அந்த .ெ