பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 «/кп»’Asuwir Ju»«учичт 1 ஆம் திருமுறை (2) ஆண்பனை பெண்பனையான வரலாறு:திருப்புகழ் 681 பக்கம் 68குறிப்பு (3) செம்மல் - போர்வை, மூடி, செம்முதல் - மூடுதல் "தன்செவி செம்மி-கந்தபுராணம்.இந்த்ராணி2 76. இறைவனைப் பாடு என்று பாணனுக்கு அறிவுறுத்தல்; பாணனொடு வெகுளுதல் செம்மலை வண்டு கடரங்க மாவென்ற திண்படைவேற் செம்மலை வண்டு வசவார ணத்தனைச் செப்பவுன்னிச் செம்மலை வண்டு தவந்தமிழ்ப் பாணதெண் டீங்கையில்வாய் செம்மலை வண்டு விருப்புறு மோவிது தேர்ந்துரையே. (ப-உ) செம் - சிவந்த நிறத்தையுடைய, மலை - கிரவுஞ்ச கிரியையும், வண்டு - சங்கினங்கள், உகள் - உலாவுகின்ற, தரங்கம் - கடலின்கண், மா மாவடிவாய் நின்ற சூரனை,வென்ற-செயித்த திண் - திண்ணிய, படைவேல் - வேலாயுதத்தையுடைய, செம்மலை - கடவுளை, வண்-வளப்பமிகுந்ததுவசவாரணத்தனை-கோழிக்கொடியையுடைய, குமாரக் கடவுள்ை, செப்ப - புகழ்ந்து பாட உன்னி - நினைத்தும், செம்மலை-மனத்தைப் புதைத்துவிடாதே.வண்டு-குற்றம்.தவு-நீங்கிய, அம்-அழகிய, தமிழ்ப்பாண-தமிழ்ப்பாணனே தெள் தெளிந்தும், தீம் ப்புற்றும், கையில் - கரத்தில், வாய் வாய்ப்பினும், செம்மலை பழமையாகிய பூவை, வண்டு சுரும்பினங்கள், விருப்புறுமோ இச்சிக்குமோ, இது இதை தேர்ந்து - ஆராய்ந்து, அக்கடவுளைப் பலகாலும் புகழ்ந்துபாடு (எறு) நீ - தோன்றா எழுவாய், உரை - பயனிலை,ஏ-அசை (க-உ) குற்றமின்றி யின்னிசை பாடும் பாணனே! வண்டுகள் அன்றலர்ந்த மலர்களைவிட்டுப் பழமையாகிய மலர்களை விரும்புமா? அத்தன்மையள் யானென்றறிந்து நீ கிரவுஞ்சகிரியையும் சமுத்திரத்தில் மா வடிவாய் நின்ற சூரனையும் வென்ற கோழிக் கொடியோனான கந்தசுவாமியினது திருப்புகழைக் குறைவின்றிப் பலகாலும் புகழ்ந்து பாடுவாயாக. (கு.உ) (1) செம்மலை - மனத்தைப் புதைத்துவிடாதே - மனத்தை மூடாது - நினைத்து முருகனைப் பாடு என்றபடி செம்முதல் மூடுதல் - பாட்டு 75 பார்க்க செம்மல் - பழம்பூ உதிர்பூஞ் செம்மலின் ஒதுங்கினர்' சிலப்பதிகாரம்-10-72,740 உரை.