பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

տլետոյի որ ի) |[] / இந்தப் | // тI имкал) | IWF on I MP ԼէոտթM( ) -- 'ஆவாகனத்துக்கு' உபகரணமாக வள்ளிமலை சுவாமிகள் கொண்டனர். சிவபிரான் காலனை உதைத்தது - திருப்புகழ் 399, பக்கம் 510 குறிப்பு. கங்கையே நதிகளுட் சிறந்தது. அது நதிகளுக்கு அரசு "திரையிடங் கொளும் நதிகளிற் சிறந்த கங்கை"-கந்த புராணம் 6.24.218. "ஆற்றினுக்கரசாங் கங்கை"-திருவிளை தீர்த்த 2 அதனால் துங்கபத்திர் ஆதிய பிற நதிகள் கங்கையை வணங்கும். துங்கை, பத்திரி இரண்டு நதிகளும் சேர்ந்ததால் துங்கபத்திரி எனும் பெயர் வந்தது. 21. அகங்காரிகள்பால் அணுகாதிருக்க அருள்புரி சிந்தா குலவ ரிசைப்பேரு முருநஞ் சீருமென்றோர் சிந்தா குலவ ரிடத்தனு காதரு டீமதலை சிந்தா குலவரி மாயூர வீர செகமளப்பச் சிந்தா குலவரி மருக சூரனைச் செற்றவனே. (ப-உ) சிந்தா-ஒருக்காலும் அழியமாட்டா,குலவரிசைப் பேரும் நமது வமிச பரம்பரை நாமமும், ஊரும் நமது நகரமும், நஞ்சீரும் நமது சிறப்பும், என்று ஓர் - என்று எண்ணுகின்ற, சிந்தா குலவ ரிடத்து வருந்து மனத்தையுடைய அஞ்ஞானிகள்பால், அணுகாதருள் - சேராதிருக்க அதுக்கிரகிக்க வேண்டும்; தி மதலை அக்கினியிற் பிறந்த கோழியை, சிந்தா கொடியாகக் கொண்டவனே! குலவு-பிரகாசிக்கின்ற, அரி பச்சை நிறம் பொருந்திய, மாயூர வீர - மயிலேறுஞ் சேவகனே! செகம் - பூமியை, அளப்ப-அளக்கும்படி, சிந்தாகு-வாமனமாகி, உலவுஉலாவின, அரி விஷ்ணுவின், மருக - மருகனே! சூரனை - சூரனை, செற்றவனே - செயித்தவனே! (எறு) நீ - தோன்றா எழுவாய், அணுகாதருள் பயனிலை (க - உ) கோழிக் கொடியோனே! பச்சை மயில் வீரனே! வாமனாவதாரங் கொண்டமான் மருகோனே! சூர சங்காரனே! லெளக்க வாழ்வை நித்தியமாய் நம்பி மனம் வருந்துவோர் பாற் சேராதிருக்க எனக்கருள்செய். (கு - உ) (1) தீமதலை கோழி, சூரனொடு பொருதபோரில் - தீ அக்கினி முருகவேளுக்குக் கோழிக் கொடியாகத் தோன்றின காரணத்தால் - கோழியைத் தி மதலை என்றார்; கோழிக் கொடியைத் திமதலை சிந்து என்றார்-சிந்து-கொடி புங்கவர் யாவரும்...துளயவன் ஏறுதேர் மீது சேதனம் இல்லை வியன்கொடி அதி நீயென் றழவினை ஏவினர்.