Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 55 - தீதோ மரணந்த
Kandhar andhAdhi - theedhO maraNandha
Kandhar andhAdhi - theedhO maraNandha    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.213  pg 4.214 
 WIKI_urai Song number: 55 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 55 ... தீதோ மரணந்த   (முருகனைத் துதிக்க புத்திக்கு உபதேசம்)

......... பாடல் .........

      தீதோ மரணந் தவிரும் பிறப்பறுந் தீயகற்புந்
      தீதோ மரணம் பரமீது தானவர் சேனை முற்றுந்
      தீதோ மரணந் தனபூசு ரர்திரண் டேத்தியமுத்
      தீதோ மரண மலையாளி யென்றுரை தென்னுறவே ...... 55

......... சொற்பிரிவு .........

தீதோ மரணம் தவிரும் பிறப்பு அறும் தீய கல்

(புந்) தீ தோம் அரண் அம்பர மீது தானவர் சேனை முற்றும்

தீ தோமர ணந்தன பூசுரர் திரண்டு ஏத்திய

(முத்) து ஈது ஓம ரண மலையாளி என்று உரை தென்னுறவே.

......... பதவுரை .........

தீயகல் புந்தீ ... கொடியனவற்றையே கற்கின்ற ஏ மனமே,

தீதோ ... தீமை மாத்திரமோ

மரணம் தவிரும் ... இறப்பும் ஒழிந்து போகும்,

பிறப்பு அறும் ... பிறவியும் நீங்கும் (ஆதலால்),

தோம் ... குற்றத்திற்கு,

அரண் ... இடம் ஆகிய,

அம்பர மீது ... கடலின் கண்,

தானவர் சேனை முற்றும் ... அசுர சேனை அனைத்தையும்,

தீ ... தகித்த,

தோமர ... கை வேலை உடையவனே,

ணந்தன ... கருணா மூர்த்தியே,

பூசுரர் திரண்டு ஏத்திய ... வேள்வி முடியும் காலத்தில் வேதியர்கள் எல்லோரும் திரண்டு கொண்டு ஒரே மாதிரியாகிய உச்ச குரலில் சுப்ரமண்யோம் என்கிற மந்திரத்தை முழக்கி வணங்குகின்ற,

முத்து ... முத்துக்குமரனே,

ஈது ... இந்த,

ஓம ... வேள்வியில் கொடுக்கப்படும் அவிர் பாகத்திற்கு,

ரண ... உரிமையை உடையவனே,

மலையாளி ... குறிஞ்சிக் கடவுளே,

என்று உரை ... என்று துதிப்பாயாக,

தென்னுறவே ... உன் சித்தம் அழகு பெறவே.

......... பொழிப்புரை .........

தீமையே கருதும் புத்தியே கடலின் கண் அசுரர் சேனையை அழித்த வேலாயுதனே, வேதியர்கள் யாகத்தில் துதித்து கொடுக்கும் அவிர் பாகத்தை ஏற்பவனே, சரவண முத்தையனே, குறிஞ்சிக்கடவுளே என்று துதித்தால் உன்னுடைய தீமை அழிவது மாத்திரமா? இறவாத பிறவாத நிலையும் வாய்க்கும்.

கந்தர் அந்தாதி - 55 - தீதோ மரணந்த
Kandhar andhAdhi - theedhO maraNandha
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - theedhO maraNandha

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]