Murugan Temple GopuramKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

உலகளாவிய
முருகன் ஆலயங்கள்

Worldwide
Murugan Temples

Sri Kaumara Chellam
Sri Mayura Nathar Temple - Dengkil, Malaysiaஸ்ரீ மயூரநாதர் திருக்கோயில்
டெங்கில் செலாங்கூர் மாநிலம் மலேசியா

Flag of Malaysia  Sri Mayura Nathar Temple  Flag of Selangor State
Dengkil Selangor Malaysia
history address timings special events previous-other names location map

இணைய ஆசிரியர்களின் குறிப்பு:
'கௌமாரம்.காம்' இணையத் தளத்திலுள்ள விவரங்களுக்கு நாங்கள் பொருப்பல்ல
என பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். மிக்க நன்றி.

Webmasters' note:
Please be advised that we are not responsible for the accuracy of details
given in Kaumaram.com. Thank You.



இத்தலத்தின் முன்னாள்/மற்ற பெயர்கள்
Previous-Other names of this Venue

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருக்கோயில்
Srimath Pamban Swamigal Thirukkoyil

ஆலயத்தைப் பற்றி
About the temple

ஆலயம் அமைந்த வரலாறு
('பாம்பனடிமை' திரு. எஸ். மணியம் - ஆலயத் தலைவர்)

"கோயிலில்லா ஊரில் குடியிருக்கலாகாது" என்பது முதுமொழி. கம்போங் அம்பர் தினாங் அப்படிப்பட்ட ஓரிடம்.

ஏறத்தாழ நூற்று இருபது நில உடைமையாளர்கள் வாழ்ந்து வரும் அம்பர் தினாங் வட்டாரத்தில் ஓர் ஆலயம் கிடையாது. லாட் 31 என்னுமிடத்தில் பொது உபயோகத்துக்கென்று அரசாங்கம் 1.8 ஏக்கர் நிலத்தை வழங்கியது. அந்த நிலம் பயன்படுத்தப் பெறாமல் பொட்டலாகக் கிடந்தது. அதனால், காலப்போக்கில் இந்த வட்டாரம் மேம்பாடடையவிருந்ததன் காரணமாக தரப்பட்ட நிலம் கைவிட்டுப் போகும் நிலை ஏற்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் இறைவனருளால் திருப்பரங்குன்றப் பாம்பன் சுவாமிகள் திருக்கோயில் நிறுவனர் ஸ்ரீலஸ்ரீ இராமச்சந்திர சுவாமிகள் ஆன்மீகச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு மலேசியாவுக்கு வருகை தந்திருந்தார்கள். மலேசியப் பாம்பன் சுவாமிகளின் அடியார்கள் சிலர் கூடிச் சுவாமிகளை அணுகி மேற்குறிப்பிடப் பெற்ற இடத்தில் ஓர் ஆலயம் அமைப்பது குறித்து ஆலோசனை கேட்டோம். சுவாமிகள் அந்த இடத்தைத் தாம் பார்க்க விரும்புவதாகச் சொன்னார்கள்.

சுவாமிகள் விருப்பப்படி 11-12-1999 அன்று அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப் பெற்றன. சுவாமிகள் அந்த இடத்துக்கு எழுந்தருளினார்கள். இடத்தைப் பார்வையிட்டார்கள். அவர்களுக்கு அந்த இடம் பிடித்தது போலும்! சுவாமிகள் பதினொரு சுமங்கலிப் பெண்களை அழைத்துக் குடங்களில் நீர் கொண்டு வருமாறு கூறினார்கள். பின் சங்கல்பம் செய்வித்தார்கள். சங்கல்பம் முடிந்து சுமங்கலிகள் திரும்பிப் போகும் போது ஒரு நிகழ்ச்சி! ஒரு வேர்க் குச்சி ஒரு சுமங்கலிப் பெண்ணின் சேலையில் மாட்டி இழுத்தது. அதனால் அப்பெண்மணி நிற்க வேண்டியதாயிற்று. இதைத்தான் தெய்வ சங்கல்பம் என்பதுபோலும்.

சுவாமிகள் நின்ற பெண்ணைப் பார்த்து, "அம்மா! உன் பெயர் என்ன?" என்று வினவ, "தெய்வயானை!" என்றார் அந்தப் பெண்மணி. உடனே சுவாமிகள் முருகனுடைய கிரியா சக்திதான் தெய்வயானை. எனவே. இந்த இடத்தில் முருகன் கோயில் தான் எழுப்ப வேண்டும்". என்று அருளினார்கள். அதுவரை என்ன கோயில் அமைப்பது என்று முடிவு செய்யப் பெறவில்லை என்பது இங்குக் குறிப்பிடப்பட வேண்டிய செய்தியாகும். எல்லாம் திருவருளின் செயலே.

ஸ்ரீமத் பாம்பன் சிவாமிகளின் குருவருளும். ஸ்ரீ மயூர நாதப் பெருமான் திருவருளும், ஸ்ரீலஸ்ரீ இராமச்சந்திர சுவாமிகளின் நல்லாசியும் சேர்ந்த புண்ணியத்தால், 7-2-2000த்தன்று ஸ்ரீ மயூரநாதர் ஆலயக் கால்கோள் விழா தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்க (N.L.F.C.) தலைமை நிர்வாகி, டத்தோ B. சகாதேவன் அவர்களால் இனிதே நடந்தேறியது. பின்னர் ஆலயத் திருப்பணி 24-6-2000த்தில் தொடங்கப் பெற்றது.

எதிர்வரும் 20-1-2002 காலை மணி 10.00க்கு ஸ்ரீ மயூரநாதர் ஆலய மகா கும்பாபிஷேகம் சிறபுற நடைபெற உள்ளது. இந்தக் குறுகிய காலக் கட்டத்தில் இவ்வளவு பெரிய ஆலயத் திருப்பணி முடிவுற்று மஹா கும்பாபிஷேகம் காண்கின்றது என்றால் அதற்கு முக்கியக் காரணம் பூர்ணமான குருவருளும். பெரியோர்களின் நல்லாசியும் இங்கு நிறைந்திருப்பது தான் என்றால் அது முற்றிலும் சரியாகும். இந்த உண்மையையும், நாங்கள் பலமுறை கண்டும், உணர்ந்தும், அநுபவித்தும் வந்துள்ளோம்.

இங்குத் தற்காலிகமாக அமைந்திருக்கும் ஆலயத்தில் பலர் தங்கள் வேண்டுதலுக்கு ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் குருவருளும், ஸ்ரீ மயூரநாதர் திருவருளும் துணையாயிருந்துப் பலன் அளித்துள்ளதைத் தங்கள் வாயால் கூறும்போது எங்களால் அந்த அற்புதச் சத்தியை விவரிக்க முடியவில்லை. இந்த ஸ்ரீ மயூரநாதர் ஆலயத் திருப்பணிக்காக எல்லாம் வல்ல இறைவன் எங்களைப் பணித்திருப்பதாக மனமார எண்ணி எங்களால் இயன்றவரை இந்தப் பணியைச் செவ்வனே செய்து முடித்துள்ளோம் என ஆத்ம திருப்தி அடைகின்றோம்.

ஸ்ரீ மயூரநாதர் திருக்கோயில் வளர்ச்சிக்கு உதவிய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் குருவருளும், ஸ்ரீ மயூரநாதர் திருவருளும் பூர்ணமாகக் கிடைக்க வேண்டும் என்று மனமார வேண்டிக் கொள்கின்றோம். எல்லாப் புகழும் இறைவனுக்கே!

இக்கண்,

'பாம்பன் அடிமை' எஸ். மணியம்

ஆலயத்தின் சிறப்பு விழாக்கள்

special occasions at temple

1. பங்குனி உத்திரம் (3 நாட்கள்)
2. கந்த சஷ்டி (7 நாட்கள்)

1. Panguni Uththiram (3 days festivities)
2. Kandha Sashti (7 days festivities)



ஆலய நேரங்கள்

temple timings

6 am – 9:30 am
5:30 pm – 9:30 pm


ஆலயத்தின் முகவரி

Address of temple

Sri Mayura Nathar Alayam,
Lot 31, Kampong Ampar Tenang,
Dengkil,
Cyberjaya,
Selangor,
MALAYSIA
Postcode: 43800


ஆலயம் இருக்கும் இடம்
(கூகள் மேப்ஸ்க்கு நன்றி)

temple location
(courtesy of Google Maps)

scan the QR image on the right,
using a QR reader app on your
smart phone to copy the GPS co-ordinates
2.851008, 101.700212

Sri Mayura Nathar Temple - Dengkil, Malaysia

For help in making this:  PC  -  Android  -  IPHONE & IPAD 
இந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து
அவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.
send note to Kaumaram Webmasters

A kind request from the Webmasters of Kaumaram.com
Please send us other details about this temple.
Thank You.
மலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்
Malaysia Singapore India Mauritius Sri Lanka Europe Other Countries

Worldwide Murugan temples and temples with Murugan Sannithis
Sri Mayura Nathar Temple - Dengkil, Selangor, Malaysia
(kdcmya21)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]